Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாபோர் தொழில் வெற்றியை தொடர்ந்து திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் அசோக் செல்வன் .....

போர் தொழில் வெற்றியை தொடர்ந்து திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் அசோக் செல்வன் .. பிரபல ஹீரோவின் மகளை மணக்கிறாரா.?

தமிழ் சினிமாவில் தெகிடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ரித்திகா சிங்குடன் இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது போர் தொழில். கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த திரில்லர் படமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் போர்த் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் என்னும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியாளர் தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறார் அசோக் செல்வன். சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கிய இவர் வாழ்க்கையில் திருமண வைபவத்தில் அடி எடுத்து வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

- Advertisement -

அதுவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரின் மகளை அசோக் செல்வன் திருமணம் செய்ய இருக்கிறார். 80-கள் மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் ஆக்ஷனுக்கு பெயர் போனவர் நடிகர் அருண் பாண்டியன் இவரது நடிப்பில் வெளியான ஊமை விழிகள் மற்றும் இணைந்த கைகள் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

- Advertisement -

இவரது மகளான கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் திருமணம் செய்ய இருக்கிறார். அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான ஹெலன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான அன்பிற்கினியவள் என்று திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

நடிகர் அருண் பாண்டியனுக்கு மூன்று மகள்கள். அவர்களில் மூன்றாவது மகள் தான் கீர்த்தி பாண்டியன். முதல் இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகளுக்கு திருமணம் அசோக் செல்வனுடன் நடைபெற இருக்கிறது. இந்த திருமணம் வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்க இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைப் பற்றி விரைவிலேயே இரண்டு தரப்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular