Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா"அவங்க இல்லனா சிவ கார்த்திகேயன் இல்லை" - பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகிர்ந்த உண்மைச்...

“அவங்க இல்லனா சிவ கார்த்திகேயன் இல்லை” – பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகிர்ந்த உண்மைச் சம்பவம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவா கார்த்திகேயன் . கடைசியாக இவர் நடித்த பிரின்ஸ் என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சொல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து இவர் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் . இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

- Advertisement -

மண்டேலா திரைப்படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் மடோனா சீன் இயக்கத்தில் சிவா கார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் மற்றும் ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் நல்ல மதிப்பை பெற்று இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படங்களில் மாவீரன் திரைப்படத்திற்கான வசூல் நன்றாகவே இருப்பதாக சினிமா வட்டாரங்களும் தெரிவித்து வருகின்றன. டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களில் வெற்றியால் சிவ கார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து இவருடைய பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையே வெளியானது. ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் மடோனா அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு சிவ கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு இடையேயான நட்பினை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் . இது தொடர்பாக பேசியிருக்கும் செய்யாறு பாலு சிவகார்த்திகேயனின் நண்பர்கள் இல்லை என்றால் சிவ கார்த்திகேயன் இல்லை என தெரிவித்துள்ளார் . சினிமாவில் ஆரம்ப காலம் முதலே சிவ கார்த்திகேயனுக்கு அவரது கல்லூரி கால நண்பர்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்

- Advertisement -

மேலும் தொலைக்காட்சிகளில் சிவகார்த்திகேயன் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே அவரது நண்பர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கூட சிவ கார்த்திகேயன் தன் நண்பர்களின் கருத்தை கேட்டுத்தான் சில முடிவுகளை எடுப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் நண்பர்களின் மீது பாசமும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்றால் அதேபோல அவரது நண்பர்களும் சிவ கார்த்திகேயனின் முன்னேற்றத்தில் உண்மையான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனின் ஆரம்பகால நிகழ்வு ஒன்றை பதிவு செய்திருக்கிறார் செய்யாறு பாலு. சிவகார்த்திகேயன் சினிமாக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் . சூட்டிங் மற்றும் கால் சீட் பிஸியாக இருந்ததால் சிவகார்த்திகேயன் ஆல் அந்த பேட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பத்திரிக்கை கடும் கோபத்தில் இருந்திருக்கிறது . இப்போதுதான் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்த ஒருவருக்கு இவ்வளவு திமிரா? என பத்திரிகை பேசத் தொடங்கிய போது அந்த பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார் சிவா கார்த்திகேயனின் நண்பர் .

மேலும் அந்த பத்திரிகையாளர்களிடம் மிகவும் சாந்தமாக அமைதியான முறையில் சிவ கார்த்திகேயனுக்கு நடந்த நிகழ்வுகளை விளக்கி இருக்கிறார். கால்ஷீட் பிரச்சனையால் தான் அவரால் அந்த பேட்டிக்கு வர முடியவில்லை என அந்த பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அலுவலகத்தில் இருந்தே சிவா கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேச வைத்திருக்கிறார். சிவா கார்த்திகேயனும் கலந்து கொள்ள முடியாததற்கு அவர்களிடம் மன்னிப்பு கோரி தன் பிரச்சனையை விளக்கி இருக்கிறார் . இதனால் மிகப்பெரிய பிரச்சினை சுமுகமாக முடிந்திருக்கிறது . இவ்வாறு பழைய கட்டான சூழ்நிலைகளிலும் சிவகார்த்திகேயனுக்கு அவரது நண்பர்கள் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் நண்பர்களே என்றால் சிவ கார்த்திகேயன் இல்லை என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்

Most Popular