Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா" எப்பா என்ன டா பண்ணி வச்சி இருக்கீங்க " - படத்தைப் பார்த்து விட்டு...

” எப்பா என்ன டா பண்ணி வச்சி இருக்கீங்க ” – படத்தைப் பார்த்து விட்டு சமுத்திரகனி பேட்டி

ஹச் வினோத் அவர்களின் இயக்கத்தில் போனி  கபூர் தயாரிப்பில் தல அஜித் குமார் நடித்த  திரைக்கு வர இருக்கும் படம் துணிவு  இந்தப் படமானது வருகின்ற ஜனவரி 11-ம் தேதி  திரைக்கு வர இருக்கிறது . இப்படத்தின் ப்ரோமோ வேலைகள் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி போன்ற  முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

முதல்முறையாக  தல அஜித்துடன்  இணைந்து நடித்திருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி. சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த  சமுத்திரக்கனி தல அஜித் ஓட நான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்தப் படத்தில் அஜித் குமாருடன் நான் நடித்தது  ஒரு மறக்க முடியாத அனுபவம். அவர் என்னை ஒரு சகோதரர் போல பார்த்துக் கொண்டார். அவருடன் நடிக்கும் போது நான் எந்த அசோகரியத்தையும் உணரவில்லை என்று கூறி இருக்கிறார். இந்தப் படத்திற்கு  முன்பாகவே அஜித்தை எனக்கு நன்றாக தெரியும் என்னுடைய முதல் படமான உன்னைச் சரணடைந்தால் படத்தை  இயக்கிய பிறகு அஜித் என்னை  அழைத்து பாராட்டினார் . ஒரு முறை எனது தாயாரின் பேட்டி  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான போது அதனை பார்த்துவிட்டு போன் செய்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். எழுமின் தாயாரிடம் ஆசீர்வாதமும் வாங்கினார் என்று தனது கடந்த கால அஜித்துடன் நான் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

துணிவு படத்தில் சமுத்திரகனி ஒரு காவல்துறை அதிகாரியாக  நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனி அவர்கள் ” நான் ஒரு படத்திற்கு  நடிகனாக நடிக்கச் செல்லும் போது எனக்குள் இருக்கின்ற இயக்குனர் மற்றும் எழுத்தாளரை  என் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று விடுவேன். இயக்குனர் ஹெச் வினோத் மிகவும் ஒரு புத்தி கூர்மையுள்ள இயக்குனர் . அவர் திரைப்படத்தில் எதிர்பார்க்கும் விஷயத்தை  எப்படி முயற்சி செய்தேனும்  அதைத் திரையில் கொண்டு வந்து விடுவார். இந்தப் படத்தில் என்னிடமிருந்து  வித்தியாசமான ஒரு நடிப்பை அவர் வாங்கி இருக்கிறார். இதற்காக என்னை  அதிகமாக முயற்சி செய்ய வைத்து  எனது நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்  என்று கூறினார் .

- Advertisement -

மேலும் துணிவு படம் பற்றி பேசிய சமுத்திரக்கனி இந்தப் படமானது அஜித் குமார் ரசிகர்களுக்கு  மிகப்பெரிய ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . அதிரடியான ஆக்சன் காட்சிகளும் விறுவிறுப்பான திரைக்கதையுடனும் இந்தப் படமானது தயாராக இருக்கின்றது. நிச்சயமாக இந்த திரைப்படம்  ரசிகர்களை சீட்டின்  விளிம்பிற்கே இழுத்து வரக்கூடிய  விறுவிறுப்பான திரில்லராக இருக்கும் . நிச்சயமாக இந்த  உங்களில்     தல ரசிகர்களுக்கு அதிரடி விருந்து காத்திருக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

இயக்குனர் வினோத் மற்றும் அஜித்துடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மறக்கமாக முடியாத அனுபவம் என்று பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனி இந்தத் திரைப்படத்தில்தான் மிகவும் ரசித்து வேலை செய்ததாக கூறியுள்ளார். இயக்குனர் வினோத் உடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான மற்றும் மகிழ்ச்சியான அனுப்பவும் என பகிர்ந்து கொண்ட அவர் படப்பிடிப்பிற்கு பின்பு  தல அஜித்தை அவ்வப்போது சந்தித்ததாக கூறினார். துணிவு திரைப்படம் ஆனது நாளை மறுநாள் துறைக்கு வர இருக்கிறது . இதுபோன்று படக்குழுவினரின்  அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள்  எகிற வைத்துக் கொண்டிருக்கிறது

Most Popular