Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவடசென்னை 2 தாமதத்திற்கு காரணம் என்ன? வெற்றிமாறன் பதில்

வடசென்னை 2 தாமதத்திற்கு காரணம் என்ன? வெற்றிமாறன் பதில்

தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சிஷ்யன் ஆவார். அவர் காட்டிய வழியில் சினிமா பாதையை தொடங்கினார் இயக்குனர் வெற்றிமாறன்.

- Advertisement -

அவர் இயக்கிய முதல் திரைப்படமே வெற்றி திரைப்படமானது இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் தனுஷும் பாரபட்சம் இன்றி அவருடைய திறமையை காட்டி இருப்பார்.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி

இவர்கள் இருவருடைய கூட்டணியும் இத்திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக அமைந்தது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்று வெற்றி அடைந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு வெற்றிமாறன் படத்தில் தனுஷ் நடித்தாலே அது ஹிட் ஆகிவிடும் என்று எல்லாரும் நினைக்க கூடிய அளவிற்கு ரசிகர்கள் இருந்தார்கள். இதற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடைய தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் வைத்து விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தத் திரைப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு 11 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸ் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

வட சென்னை

இதற்குப் பிறகு நடிகர் தனுஷ் உடன் வடசென்னை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்தார் இயக்குனர் வெற்றிமாறன். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ,அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தார்கள் வடசென்னையில் உள்ள மக்களைப் பற்றி ஒரு ஆக்சன் கிரைம் ஸ்லிம்மாக உருவாக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இருந்தது.

Vetrimaaran Viduthalai

அசுரன்

இது திரைப்படம் முடியும்பொழுது அன்புவின் எழுச்சி விரைவில் என குறிப்பிட்டிருந்ததால் வடசென்னை திரைப்படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இந்த எதிர்பார்ப்புகளை அப்படியே விட்டுவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் தனுசையே வைத்து அசுரன் என்ற திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

தனுஷ் கேள்வி

என்ன திரைப்படங்கள் வந்தாலும் வடசென்னையின் மீது ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை.ஏன் இதில் நடித்த நடிகரான தனுஷ் கூட அந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் இருந்திருக்கிறது. ஒரு மேடை கூட வெற்றி மாறனிடம் வடசென்னை திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகம் எப்பொழுது இயக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லை. இப்படி ரசிகர்களுக்கு எந்த பதிலும் கூறாமல் இயக்குனர் வெற்றிமாறன் .விடுதலை வாடிவாசல் என்று அடுத்தடுத்து திரைப்படங்களை பற்றி மட்டுமே சிந்தித்து வந்தார்.

வெற்றிமாறன் விளக்கம்

அப்பொழுது ரசிகர்களுடைய ஆர்வத்தை அறிந்த இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தையும் முடித்துவிட்டு பின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறேன். அதற்குப் பிறகு வடசென்னை திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் வட சென்னை திரைப்படத்தின் ராஜன் என்ற இதா பாத்திரத்தில் நடிகர்அமீர் நடித்திருந்தார் அந்த ராஜன் என்ற கதாபாத்திரத்தையே மையமாக வைத்து ராஜன் வகையறா என்ற திரைப்படத்தை உருவாக்கி வைத்திருக்கிறாராம் இயக்குனர் வெற்றி மாறன். அடுத்தடுத்து வெற்றிமாறன் தன்னுடைய திரைப்படங்களை இயக்கப் போவதாக கூறி இருக்கும் இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

Most Popular