சினிமா

“இசைஞானியின் இசையில்! நடிகர் தனுஷ் குரலில்! வெளியாக இருக்கும் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்”! அப்டேட் !

இயக்குனர் வெற்றிமாறன்  தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் விடுதலை. இத்திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இந்த  திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து இருக்கின்றன.

விடுதலை பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகியவற்றிற்கான படப்பிடிப்புகள்  முடிவடைந்ததாக அறிவித்துள்ள பட குழுவினர் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து இருக்கிறது  இந்தப் படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியுடன் பவானி ஸ்ரீ பிரகாஷ் ராஜ்  கௌதம் வாசுதேவ் மேனன் ராஜு மேனன் மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எல்ரெட் ராஜ்குமார் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இத்திரைப்படமானது தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Advertisement

இத்திரைப்படத்தில் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்திருக்கிறார் வெற்றிமாறன். இதற்கு முன் அவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமானது பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின்  துணைவன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி உள்ள திரைப்படத்தின் அறிவிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என  படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ஸ் நிறுவனமே வெளியிட இருக்கிறது.

தற்போது இத்திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதல் சிங்கிள் பாடல்  பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது பட நிறுவனம்.  இசைஞானி இளையராஜா ஹிட் படத்திற்கு இசையமைத்திருப்பதால்  இப்படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்  அதிகமாகவே இருந்து வந்தது. மேலும் இந்தப் பாடலை  நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் இத்தனை படத்தின் முதல் பாடலுக்காக  ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற படத்தின் சூட்டிங் தற்போது முடிந்து படம் வெளியாவதற்கு  தயாராகிக் கொண்டிருக்கிறது. சூரி  போலீசாகவும் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இத்திரைப்படமானது நக்சல் பாரிகளின் வரலாற்றை பேசும் வகையில் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஒரு பாகமாக மட்டுமே  எடுக்கப்பட்டு வந்தது. பின்னர்  துணைவன் நாவலின் அம்சம் கருதி  இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களையும் படமாக்கி முடித்து இருக்கிறது படக்குழு. இந்தப் படம் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் திரை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top