Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாநன்றி மறந்த சூர்யா.. துணை நின்ற விஜய் சேதுபதி? கே.வி. ஆனந்த் குடும்பம் நெகிழ்ச்சி

நன்றி மறந்த சூர்யா.. துணை நின்ற விஜய் சேதுபதி? கே.வி. ஆனந்த் குடும்பம் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் ஆகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் கே வி ஆனந்த். அயன், அனேகன், மாற்றான்,கோ, உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதில் சூர்யாவின் தலையெழுத்தையே மாற்றியது அயன் திரைப்படம் தான். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் அப்போதைய காலத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இதன் மூலம் நடிகர் ரஜினிக்கு பிறகு சூர்யா தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற லெவலுக்கு சென்றார். இந்த நிலையில் கே வி ஆனந்த் கடந்த ஆண்டு காலமானார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கே வி ஆனந்தின் மகள் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இதில் தேவையானதால் பலன் பெற்ற பெரிய நட்சத்திரங்கள் யாரும் வரவில்லை. மேலும் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால் கே வி ஆனந்த் எடுத்த கவனம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

- Advertisement -

இதனால் அந்த மரியாதைக்காக அவர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தேவையானது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பழையதை மறக்கும் சினிமா உலகத்தில் விஜய் சேதுபதி மட்டும் கே வி ஆனந்த் இல்லை என்றாலும் அவர்களுடைய குடும்பத்திற்காக வந்திருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்கள்.

தந்தை இல்லாத இந்த நேரத்தில் அவருடைய புகைப்படத்தை வைத்து இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சூர்யா ரசிகர்கள் சூர்யா தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகத்தான் அவரால் பங்கேற்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். சூர்யா சென்னை திரும்பும் போது கண்டிப்பாக கே வி ஆனந்த் வீட்டுக்கு செல்வார் என்றும் அவருடைய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Popular