சினிமா

கேஜிஎப்க்கு செல்லும் விக்ரம்.. இது செம டிவிஸ்ட் ஆச்சே..! கொண்டாட்டம் தான்

நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு 2023 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாட்டம் தான். தமிழ் சினிமா வரலாற்றிலே அதிக வசூலை ஈட்டிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் தற்போது தீவிரமாக நடித்த வருகிறார். இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மாளவிகா மோகனுடன் நடிக்கும் காட்சியை பா ரஞ்சித் படமாக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் ஷூட்டிங் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஏற்கனவே படத்திற்கு தங்கலான் என பெயரிடப்பட்டு தற்போது கேஜிஎப் பகுதியில் ஷூட்டிங் நடைபெற உள்ளதால் இது கேஜிஎப் படப்பாணியில் வித்தியாசமான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பா ரஞ்சித் இயக்குவதால் கே ஜி எஃப் பகுதியில் எப்படி தொழிலாளர்கள் நசுக்கப்பட்டார்கள் என்பதை பேசும் திரைப்படமாக தங்களான் இருக்கும் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கிறார்கள். இதே போன்று துர்வ நட்சத்திர திரைப்படத்தின் சூட்டிங்கும் மீண்டும் தொடங்க உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான படத்தை விக்ரம் நடித்து வருவதால் இழந்த மார்க்கெட்டை அவர் மீட்பார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top