Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇது ரொம்ப அநியாயம்.. ஷங்கர் மகளுக்காக பிரபல பாடகியை தூக்கிய விருமன் படக்குழு

இது ரொம்ப அநியாயம்.. ஷங்கர் மகளுக்காக பிரபல பாடகியை தூக்கிய விருமன் படக்குழு

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கரின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராஜலட்சுமி. இவர் சூப்பர் சிங்கரில் இருந்த பொழுதே தன்னுடைய குரல் வளர்த்தால் பல ரசிகர்களை கொண்டவர். இவர் தன் கணவர் செந்தில் கணேஷோடு சேர்ந்து பல பாடல்களை தன் சொந்த முயற்சியை கொண்டு எழுதி அதை பாடுவார்கள். இவர்கள் பாடும் பாடல்கள் மக்கள் இசை என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறாக ராஜலட்சுமி தன்னுடைய பாடல் திறனை வெளி காட்டினார். இதன் காரணமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சார்லி சாப்ளின் 2, விஸ்வாசம் ,அசுரன், புஷ்பா போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் பெருமளவில் வெற்றியைப் பெற்றது. இதெல்லாம் வேறு இன்னும் பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

- Advertisement -

அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் ராஜலட்சுமி பாடிய பாடல் ரசிகர்கள் மனதில் பெருமளவில் இடம் பிடித்தது. குறுகிய காலத்திலே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய பெருமையைக் கொண்டவர் பின்னணி பாடகி இன்று புகழைக் கொண்ட ராஜலட்சுமி தற்பொழுது தமிழ் சினிமாவின் மீது ஒரு குற்றச்சாற்றை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான கதைக்களத்தைக் கொண்டு பல படங்களை இயக்கி வெற்றி பெற செய்தவர் இயக்குனர் சங்கர். இவரின் மகள் அதிதீஷங்கர் தற்பொழுது கொம்பன் மருது போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிதி சங்கர் நடித்த முதல் படத்திலேயே அவருக்கு நிறைய ஆதரவுகள் பெருகி இருக்கிறது. மேலும் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , அதிதி சங்கர் ஒரு நல்ல தலைகனம் இல்லாத மரியாதை தெரிந்த பெண் என்பது போன்று பாராட்டி தன் மொத்த குடும்பத்தின் ஆசிர்வாதமும் அதீதி சங்கருக்கு உண்டு என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதிதி சங்கருக்கு எதிராக சர்ச்சைகளும் குவிக்கின்றது. சமீபத்தில் அதிதீஷங்கர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு நெப்போட்டிசம் காரணம் என்று நடிகை ஆத்மிகா மறைமுகமாக செய்திருந்த ட்விட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அதிதீ ஷங்கரின் முதல் படமான விருமன் திரைப்படத்தில் மதுரவீரன் என்று ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.

அதீதி சங்கர் பாடிய மதுரவீரன் என்ற பாடல் ராஜலட்சுமி பாடிய பாடல் என்றும் அந்தப் பாடலை ஷங்கரின் மகள் அதிதீசங்கருக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவும் அவர் ஒரு பிரபலத்தின் மகள் என்பதற்காகவும் முன்னுரிமை கொடுத்து தன்னுடைய பாடலை வெளியிடாமல் மறுக்கப்பட்டதாகவும் ராஜலட்சுமி குற்றம் சாட்டு இருக்கிறார்.

தன் குரலில் வெளியாக இருந்த மதுரவீரன் பாடலை வெளியிடாமல் அதீதி சங்கரின் குரலில் வெளியிட்டதால் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் பெருமளவில் பரவி வருகிறது என்று ராஜலட்சுமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
இப்படி அடுத்தடுத்து நிப்போட்டிஸம் பற்றிய சர்ச்சை அதிதீஷங்களுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular