Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅந்த மனசு தான் சார் கடவுள்.. கணவரை இழந்தவர்களுக்கு உதவி செய்த பாலா & லாரன்ஸ்.....

அந்த மனசு தான் சார் கடவுள்.. கணவரை இழந்தவர்களுக்கு உதவி செய்த பாலா & லாரன்ஸ்.. அழுதுக் கொண்டே காலில் விழுந்து நன்றி சொன்ன பெண்.. !

சினிமா வட்டாரங்களில் ஒரு பக்கம் படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றி பல நூறு கோடிகள் சொத்து சேர்க்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சிலர் குறைந்த தொகை பெற்றாலும் அதனை வைத்து மக்கள் சேவை செய்வோரும் உள்ளனர்.

- Advertisement -

அண்மையில் அந்தப் பட்டியலில் கே.பி.ஒய் பாலா சமூக வலைத்தளத்தில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து தன்னால் முடிந்ததை செய்து வருகிறார். அண்மையில் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து அவர் செய்த உதவி வைரல் ஆகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் மக்கள் சேவையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். குழந்தைகளை படிக்க வைப்பது, ஊனமுற்றோர்களுக்கு நல்ல வாழ்கை அமைத்து தருவது என சேவைகள் பல செய்துக் கொண்டுள்ளார். தன் திரைப்படங்களிலும் இல்லாத மக்களுக்கு உதவுமாறு அறிவுதுபவர் லாரன்ஸ்.

- Advertisement -

சமீபத்தில் பாலா பல உதவிகள் செய்து தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். புயலில் பாதிக்கபட்ட 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்தார். இன்ஸ்டாகிராமில் ஒரு நபர், சைக்கிள் வாங்கக் கூட வசதியில்லை என வருந்திய வீடியோவில் கண்டு மனம் தாங்காமல் உடனே அவருக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கித் தந்தார் பாலா.

- Advertisement -

இது போல தொடர்ந்து உதவிகள் செய்து வரும் பாலாவை மேடை நிகழ்ச்சியில் பாராட்டினார் ராகவா லாரன்ஸ். சேவை செய்யும் போது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தன்னிடம் கேட்குமாறு சொன்னார். அவர் சொன்னதைப் போலவே இருவரும் இணைந்து இரு தினங்களுக்கு முன்னர் முருகம்மாள் என்பவருக்கு பெரிய உதவியைச் செய்துள்ளனர்.

முருகம்மாள் என்பவர் திருமணமாகி தன் கணவரை இழந்தவர். சமோசா விற்று தனது மூன்று மகள்களை காப்பாற்றி வருகிறார். அவரின் இந்த நிலையைக் கண்ட பாலா – லாரன்ஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் முருகம்மாளின் ஆசைப்படி அவருக்கு ஆட்டோ வாங்கித் தந்துள்ளனர். பாலாவின் இந்தச் நல்ல செயல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Most Popular