Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇனி நான் தான் அடுத்த விஜய்! தளபதி இடத்தை பிடிப்பேன்.. வின்ஸ்டார் விஜய் சூளுரை

இனி நான் தான் அடுத்த விஜய்! தளபதி இடத்தை பிடிப்பேன்.. வின்ஸ்டார் விஜய் சூளுரை

ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுகள் புதிது புதிதாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது .அந்த வகையில் தற்பொழுது ஒரு அசைக்க முடியாத தன்னம்பிக்கை உடைய ஒருவரை தமிழ் சினிமா கண்டெடுத்திருக்கிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ,சுப்ரீம் ஸ்டார், ஐகானிக் ஸ்டார் ,நேச்சுரல் ஸ்டார் இவர்களின் வரிசையில் தற்பொழுது இடம் பெற வந்திருக்கிறார் வின்ஸ்டார் விஜி.
விஜய் அஜித் தனுஷ் சிம்பு சிவகார்த்திகேயன் இவர்களுக்கு மத்தியில் யார் இந்த வின்ஸ்டார் விஜய். இவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்ற பல கேள்விகள் தற்போது ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு மாசாக இருந்தது அவருடைய பேட்டி.

ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த வின்ஸ்டார் விஜய் நடித்த எப்போதும் ராஜா என்ற திரைப்படத்தின் டிரைலர் .ஆனால் அது பெருமாளவில் யாரையும் சென்று சேரவில்லை வெளியிட்டதே தெரியாத அளவிற்கு இருந்து விட்டது .எப்பொழுதும் ராஜா திரைப்படத்தின் டிரைலர் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹெச் முருகன். இவருக்கும் இதுதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் நிறைய சுவாரசியங்கள் இருக்கிறது .அதாவது ஒரு பெரிய நடிகர்களின் திரைப்படத்திற்கு கூட தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் என்று பலரின் உதவி தேவை இருக்கிறது. இவர் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து சினிமா என்ற துறையின் முதன் முதலாக கால் எடுத்து வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இவரே 80 லட்சம் எந்த கடனும் வாங்காமல் சொந்த முயற்சியில் செலவிட்டு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். தான் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்காக இத்தனை ஆண்டுகள் பணம் புரட்டி பின் கடந்த வாரம் திரையரங்கில் இத்திரைப்படத்தை வெளியிட்டார்.

இத்திரைப்படம் வந்ததே தெரியவில்லையே எப்படி திரைப்படம் வெளியிடப்பட்டது .யார் இவர் என்ற பல கேள்விகள் வந்த நிலையில் தற்போது இவர் திரைப்படத்தின் சக்ஸஸ் விழாவை ஏற்பாடு செய்து .அதில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் வின்ஸ்டார் விஜய்.

அதில் அவர் பேசியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் சற்றும் தளராமல் தன்னம்பிக்கையுடன் பேசிய அவருடைய பேச்சு பிரமிக்க வைத்திருக்கிறது. அவர் பார்ப்பதற்கு  மிகவும் எளிமையான தோற்றத்தில் தான் இருக்கிறார். அவர் நடித்த அந்த படத்தில் இருக்கும் தோற்றத்திற்கும் தற்பொழுது அவர் இருக்கும் தோற்றத்திற்குமே பல மாற்றம் இருக்கிறது .10 வருடத்தில் மெருகு குலைந்து விட்டார் வின்ஸ்டார் விஜய்.இருப்பினும் அவருடைய அந்த தன்னம்பிக்கை எங்கும் செல்லவில்லை.

பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு வின்ஸ்டார் விஜய் எனக்கு அஜித் ,விஜய் எம்ஜிஆர் ,சிவாஜி போன்ற எல்லா நடிகர்களையும் பிடிக்கும். அவர்கள் எல்லாருடைய ஃபார்முலாவும் வெற்றி பார்முலா தான் அதை தான் நானும் பாலோ செய்தேன். அதேபோல் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை .அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. தற்பொழுது கூட தளபதி விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அந்த இடம் காலியாக இருக்கிறது அதை நான் நிறைவு செய்ய வந்திருக்கிறேன். அதுவே எனது ஆசை என்றும் குறிப்பிட்டார் வின்ஸ்டார் விஜய்.

இத்தனை ஆண்டு காலம் திரைப்படம் வெளியிடாமல் இருந்ததற்கு  இடையில் வந்த கொரோனாவும் ,போதிய பணம் வசதி இல்லாதது தான் காரணம் என்று குறிப்பிட்டார் வின்ஸ்டார் விஜய் மேலும் இத்திரைப்படம் ஐந்தாறு நாட்கள் ஓடியதே என் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறார். வின்ஸ்டார் விஜய் மேலும் தான் விஜய், அஜித் போன்று நிச்சயமாக சினிமாவில் உயர்ந்தே ஆவேன் .பெரிய நடிகர்கள் விரும்பினால் அவர்களுக்கு திரைப்படமும் இயக்குவேன் என்றும் கூறியிருக்கிறார். 

அதே போல் இத்திரைப்படத்தை வெளியிட்ட ரோகினி, ஏஜிஎஸ் போன்ற பெரிய திரையரங்குகளில் தான் திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது . அதனால் அவர்களுக்கு அந்த மேடையில் நன்றியும் கூறினார் வின்ஸ்டார் விஜய். மேலும் இந்த திரைப்படத்தின் லாபமா நஷ்டமா என்பதெல்லாம் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகி தான் தெரிய வரும் ஆனால் அது பற்றி எனக்கு கவலை இல்லை அடுத்ததும் ஒரு திரைப்படம் செய்ய இருக்கிறோம்.

அது வரக்கூடிய மார்ச் ஒன்றாம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார் . வின்ஸ்டார் விஜய் எங்களுக்கு நல்ல நிலை வரும் பொழுது தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளுக்கும் திரைப்படங்களை கொடுக்கும் பொழுது அது மூலம் நிச்சயம் எங்களுக்கு லாபம் கிடைக்கும் .தாய், தந்தை, சகோதரர்கள் ஏமாற்றினாலும் உழைப்பு ஒருபோதும் எங்களை ஏமாற்றாது. நான் என் உழைப்பே நம்புகிறேன் என்று கூறினார் வின்ஸ்டார் விஜய்.

இவருடைய பேட்டியை பார்த்த ரசிகர்கள் இவரை கொஞ்சம் கூட நெகட்டிவ்வாக பேசவில்லை .அனைவருமே இவரை பாராட்டி வருகிறார்கள் .இவருடைய தன்னம்பிக்கையை கண்டு வியக்கிறார்கள் .அதேபோல இவர் இந்த அளவிற்கு வளர்ந்தது நிச்சயம் பாராட்டுக்கு உரியது நன்றாக வளர வாழ்த்துக்கள் என்று பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular