Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்க்காக குரல் கொடுக்கும் சிம்பு.. இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி

விஜய்க்காக குரல் கொடுக்கும் சிம்பு.. இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி

- Advertisement -

தமிழில் கார்த்திக் மற்றும் நாகர்ஜுனாவை வைத்து தோழா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வம்சி. இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் ராஷ்மிகா மந்தானா விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் இவர்களோடு குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சரத்குமார், சங்கீதா, கிரீஸ் ஷியாம் யோகி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தளபதி நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு சில நாட்களாகவே வாரிசு திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் பாடல் என்று பல அப்டேட்ஸ்கள் இணையதளங்களில் வந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு தெலுங்கு, கன்னடம் தமிழ் போன்ற சினிமாக்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தமன் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தற்பொழுது வாரிசு திரைப்படத்திற்கான பாடல்களை உருவாக்கி வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜயின் குரலில் ரஞ்சிதமே என்ற ஒரு பாடல் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து வருகின்றது .

இதைத்தொடர்ந்து தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாமல் எஸ் டி ஆர் ரசிகர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் அண்மையில் ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் எஸ் டி ஆரின் உடைய குரலிலும் ஒரு பாடல் தற்பொழுது உருவாக்கப்பட்ட வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலால் ரசிகர்கள் எஸ் டி ஆர் குரலில் வெளிவர இருக்கும் இந்தப் பாடலுக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்களுக்கு தளபதியினுடைய வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது என்ற மகிழ்ச்சி இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் இந்த தகவலுக்குப் பிறகு இரட்டிப்பாகி வருகிறது. இதனால் இந்த திரைப்படத்தின் பாடல்களும் நிச்சயமாக வெற்றிபெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular