Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமா“கதைக்கு தேவை என்பதற்காக …” - ஆடை படத்திற்கு பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை...

“கதைக்கு தேவை என்பதற்காக …” – ஆடை படத்திற்கு பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலாபால் !

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவருடைய நேரமோ? என்னவோ? தெரியவில்லை
தற்பொழுது அவருடைய நிலை தலை கீழாக உள்ளது.2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற தமிழில் மூலம் தான் அறிமுகமானாவர் நடிகை அமலா பால்.

- Advertisement -

அதற்கு பிறகு இவர் நடிப்பில் மைனா, நிமிர்ந்து நில்,
வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றனர். இதனை அடுத்து தலைவா படத்தை இயக்கிய இயக்குனர்,ஏ. எல்.விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது. இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பிரிவிற்கு பின் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விவாகரத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படம் மிக சர்ச்சை ஆகி இருந்தது. இதன் பிறகு இவரது வாழ்வில் சர்ச்சைகள் என்பது ஒரு அங்கமாக மாறிப்போனது. இதன் இடையில் இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் பாடகர் ஒருவருடன் அமலா பாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்று கூட தகவல் வெளியானது. ஆனால், அது வெறும் போட்டோ ஷூட் தான் என்று கூறி இருந்தார் அமலா பால். தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் படு ஜோராக நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது இவர் மலையாளத்தில் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் அமலாபால் நடித்திருக்கிறார். இந்த ஜோடியாக ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது. அந்த ட்ரைலரில் பிரித்திவிராஜ் அமலா பாலின் லிப்ஸ் காட்சி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து அமலா பாலிடம் கேள்வி கேட்டதற்கு அவர்”
ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொல்லும்போது என்னிடம் லிப் லாக் ஆட்சி இருப்பது குறித்து சொன்னார்கள். படத்தில் இருக்கும் கதைக்கும் அந்த முத்த காட்சி ரொம்ப முக்கியம் என்று சொன்னதால்தான் நான் நடித்தேன். கதைக்கு தேவை என்பதற்காக நான் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்” என்று அமலாபால் பதில் அளித்து இருந்தார்.

இந்த காட்சி மற்றும் இவருடைய தற்போதைய பேட்டிகள் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்னதான் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை எதிர்பார்த்து ஆவளோடு
காத்திருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Most Popular