Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாசுதந்திர போராட்ட வீரரை அவமானப்படுத்தினாரா பவன் கல்யாண்.. நடிகை பூனம் கவுர் புகார்

சுதந்திர போராட்ட வீரரை அவமானப்படுத்தினாரா பவன் கல்யாண்.. நடிகை பூனம் கவுர் புகார்

தமிழ் சினிமாவில் நமது விஜய் அஜித் எப்படியோ அதே போல் தான் தெலுங்கில் பவன் கல்யாண் மாஸ் நடிகராக விளங்குகிறார்.எப்போதுமே பிற மொழி படத்தில் ஹிட்டானது தேர்வு செய்து அதனை ரீமேக் செய்வது வழக்கம்.

- Advertisement -

கடந்த ஆண்டு மலையாள படமான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை ரீமிக்ஸ் செய்து எடுத்தார். தற்போது அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தை ரீமேக் செய்து நடிக்க உள்ளார். நடிகர் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

- Advertisement -

நடிகர் விஜய், அட்லி ஆகியோர் முதல் முறையாக இந்த திரைப்படம் மூலம் தான் இணைந்தனர்.தெறி விஜய் மார்க்கெட்டில் மிகப்பெரிய உந்துதலை கொடுத்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்ய உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. உஸ்தாத் பகத்சிங் என்ற இந்த படத்தின் பெயரில் பகத்சிங் என்ற பெயர் மட்டும் பவன் கல்யாண் காலுக்கு கீழ் வருவது போல் போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு தற்போது நடிகை பூனம் கவுர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நரேன் உடன் நெஞ்சில் இருக்கும் வரை என்ற திரைப்படத்தில் பூனம் கவுர் அறிமுகமானார். தற்போது சினிமாவிலிருந்து விலகிய நிலையில் அரசியலில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் பகத்சிங் என்ற சுதந்திர போராட்ட தியாகியின் பெயரை ஏன் பவன் கல்யாண் காலுக்கு கீழ் வருவது போல் வடிவமைத்திருக்கிறீர்கள். உங்களால் சுதந்திர வீரரை மதிக்க முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை மிதிக்காதீர்கள்.

இது தெரிந்து செய்யப்பட்டதா இல்லை தெரியாமல் செய்யப்பட்டதா என்பதை விளக்க வேண்டும் என்று கடுமையாக சாடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பவன் கல்யாண் ரசிகர்கள் மட்டும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை அடுத்து பட குழு தற்போது பெயரை பவன் கல்யாண் தலைக்கு மேல் மாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Most Popular