Wednesday, June 25, 2025
- Advertisement -
Homeசினிமாவிஜய்- சஞ்சீவ் மோதல்? 6 மாதம் பேசவில்லையாம்..ஆச்சரியமா இருக்கே

விஜய்- சஞ்சீவ் மோதல்? 6 மாதம் பேசவில்லையாம்..ஆச்சரியமா இருக்கே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களும் ஒருவரானவர் தளபதி விஜய். இவர் இயல்பாகவே சிநேகமான முகபாவணையை உடையவர். அதாவது இவரை பார்த்தால் நல்ல குணம் படைத்தவர் என்ற நம்பிக்கையோடு எளிதில் பழகும் எண்ணம் அனைவருக்கும் வரும். அதன் காரணத்தினால் தான் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள்.

- Advertisement -

தளபதி விஜய் நடிக்கும் படங்களில் எல்லாம் அவரோடு ஒரு பத்து நண்பர்கள் இணைந்து இருப்பது போன்று பல திரைப்படங்களை நடித்திருக்கிறார்.கில்லி, ஷாஜகான் ,பத்ரி,புதிய கீதை, நிலவே வா, காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்களில் கூட இவருக்கு நண்பர்கள் கூட்டம் இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

- Advertisement -


இப்படிப்பட்ட இவர் நிஜ வாழ்வில் அதிக நண்பர்களை வைத்திருப்பார் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல. தளபதி விஜய்க்கு நிஜ வாழ்வின் மிகக் குறைந்த நண்பர்கள் தான் பள்ளிப் பருவத்தில் இருந்தனர்.

- Advertisement -

இன்று வரை அவருக்கு அதிக நண்பர்கள் இல்லை என்பதை அவர் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இவரோடு திரைப்படங்களிலும் நிஜ வாழ்விலும் நண்பராக ஒருவர் இருக்கிறார் என்றால் அது சின்ன திரையில் புகழ்பெற்ற நடிகர் சஞ்சீவ் தான்.நிலவே வா, பத்ரி ,புதிய கீதை போன்ற திரைப்படங்களில் நடிகர் விஜயுடன் நண்பராக நடித்திருப்பார்.

நடிகர் சஞ்சீவ் இவர் நடிகர் விஜயின் கல்லூரி நண்பன் ஆவார். சின்னச் சின்ன கதாபாத்திரமாக திரைப்படத்தில் நடித்து வந்த இவர் நாளடைவில் சின்னத்திரை மீது கவனம் செலுத்த தொடங்கினார். ஒரு சமயம் தளபதி விஜய்யும் அவர்களுடைய நண்பர்களும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜயின் நண்பர்கள் எல்லாம் வந்து நடிகர் விஜய் பற்றி கூறினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படும் சஞ்சீவ் கலந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாக ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு மேல் இருவரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற சமயம் நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம் என்ற சின்னத்திரையின் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார்.அது அவருக்கு ஒரு நல்ல பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்த தொடராகும் அதன் காரணத்தினால் அவர் அந்த தொடரின் மீது ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்த பொழுது நான் இந்த தொடரில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார் நடிகர் சஞ்சீவ்.இதனால், இவர்கள் இருவரும் ஆறு மாதம் பேசாமல் இருந்ததற்கு காரணமாய் அமைந்தது. அதற்குப் பிறகு இருவரும் சமாதானமாகி விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது

Most Popular