Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ.. கடுப்பான போலீசார்! கடும் எச்சரிக்கை

பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ.. கடுப்பான போலீசார்! கடும் எச்சரிக்கை

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் பல்வேறு திரைப்படங்களை தமிழக மக்களுக்காக கொடுத்து புகழ் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பாக்கியராஜ் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிடுவார். இந்த வகையில் நெஞ்சம் பொறுக்கவில்லையே என்று ஒரு வீடியோவை நேற்று அவர் வெளியிட்டது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் பேசிய நடிகர் பாக்கியராஜ் மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ள ஆற்றில் குளிக்க செல்பவர்கள் மர்மமான முறையில் இறந்த கிடப்பதாகவும் கும்பல் ஒன்று அங்கு ஆற்றில் குளிப்பவர்களை மூழ்கடித்து கொலை செய்வதாகவும் அவர்கள் உடலை மீட்க பணம் பெறுவதாகவும் பாக்கியராஜ் கூறியிருந்தார்.

இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு இது குறித்து சோதனை நடத்தியது. அதில் கடந்த 2023 மற்றும் 24 ஆம் ஆண்டில் இதுவரை ஒருவர் கூட பவானி ஆற்றில் உயிரிழக்க வில்லை என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மேலும் 2022 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் 20 பேர் குளிக்க சென்ற போது உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது  என்பது தெரிந்தவுடன் அங்கு சிசிடிவி கேமரா பணிகள் பொருத்தப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

- Advertisement -

இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோவை மாவட்ட எஸ்பி இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ உண்மைக்கு புறம்பானது என்றும் இப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆற்றில் சில ஆபத்தான பகுதிகளில் சிக்கி சிலர் உயிரிழப்பதாகவும் மேலும் சிலர் தற்கொலை முயற்சிக்காக ஆற்றில் இறங்கி உயிரை விடுவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அந்த இடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல பேர் ஆற்றில் இறங்குபவர்களை தடுத்து மனநல ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆற்றில் தத்தளிப்பவர்கள் மீட்பதற்காக ஒரு மீட்பு குழுவையும் உருவாக்கி அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு எந்த ஒரு உயிரிழப்பும் நிகழவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்.மேலும் இது போன்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் பாக்யராஜுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Most Popular