Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாசம்பளம் கூட வேண்டாம் அப்பா.. ஒரு வாய்ப்பு கொடுங்க.. நடிகர் ஜீவா உருக்கம்

சம்பளம் கூட வேண்டாம் அப்பா.. ஒரு வாய்ப்பு கொடுங்க.. நடிகர் ஜீவா உருக்கம்

தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு பிற்பகுதிகளில் திருப்பாச்சி, திருப்பதி என ஆக்சன் படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் ராம், கற்றது தமிழ், ஈ போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா. ஆனால் தமிழ் சினிமா தற்போது வித்தியாசமான படங்களை குறித்து வரும் நேரத்தில் இவர் மசாலா பாதைக்கு திரும்பி விட்டார் என்பதுதான் சோகமான சம்பவம்.

- Advertisement -

நடிகர் ஜீவாவின் தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.சௌத்ரி என்று அனைவருக்கும் தெரிந்ததே. நடிகர் ஜீவா தற்போது பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 100வது படத்தை விஜயை நடிக்க வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜீவா சூப்பர் குட் பிலிம்ஸ் தளபதி விஜய் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

- Advertisement -

எங்களுடைய நூறாவது படத்தில் அவர் நடிப்பதை மிகவும் பெருமையாக கருதவதாக கூறினார். தற்போது நாங்கள் இயக்குனர்களை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறிய ஜீவா அந்தப் படத்தில் விஜய் அண்ணாவுடன் நானும் நடிக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

- Advertisement -

இது குறித்து தயாரிப்பாளரான என் தந்தை ஆர்பி சவுத்ரியிடம் இந்த படத்தில் நானும் நடிக்க இருக்கிறேன்.எனக்கு சம்பளம் கூட வேண்டாம் ஃப்ரீயாவே நடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

எனினும் கதை மற்றும் நடிகர் விஜய் சம்மதம் இருந்தால் நடிகர் ஜீவா இந்த படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யும் ஜீவாவும் ஏற்கனவே நண்பன் என்ற திரைப்படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்தார்கள் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருந்தது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் ஜீவா நினைவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular