Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் மாரிமுத்துவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பகிர்ந்த ஒரு விசயம்

நடிகர் மாரிமுத்துவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பகிர்ந்த ஒரு விசயம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் பிரபலமாக இருப்பவர் நடிகர் மாரிமுத்து. இவர் சில திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

எஸ் ஜே சூர்யா துணை இயக்குனராக பணியாற்றிய காலத்தில்அவருடன் சேர்ந்து இவரும் பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதைத்தொடர்ந்து இவர் கண்ணும் கண்ணும் புலிவால் என்ற இரண்டு திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

மேலும் நிறைய திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார். ஆனால் தற்பொழுது இவரை பெருமளவில் பிரபலப்படுத்தி இருப்பது இவர் நடித்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர் தான். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் தேடி வருகிறது. அப்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் கூட இவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள் .இதன் காரணத்தினால் அதற்குத் தேவையான பிற பணிகளில் இத்திரைப்படத்தின் படக்குழுவினர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் திரைப்படத்தில் நடித்த மாரிமுத்துவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி விவரித்திருந்தார். மேலும் அதில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றிய ஒரு செய்தியையும் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயிலர் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சக நடிகர் என்ற பழக்கத்தில் நடிகர் மாரிமுத்து விடம் சில நேரம் செலவிடுவாராம். அந்த சமயத்தில் அவர் நடத்துனராக இருக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பெங்களூரில் நடத்துனராக இருந்தார் என்பது அந்தக் காலகட்டத்தில் அவர் மேடை நாடகங்களில் நடிக்கக் கூடியவர் என்றும் அனைவருக்கும் தெரியும்.

அப்படி அவர் மேடை நாடகங்கள் நடிக்கும் பொழுது ஒரு நாள் மகாபாரதத்தை நாடகமாக நடிக்கும் பொழுது பீஷ்மர் கதாபாத்திரத்திற்கு ஆள் இல்லை என்பதால் அந்த கதாபாத்திரத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே நடித்தார்களாம்.

அப்பொழுதிலிருந்தே சூப்பர் ஸ்டாருக்கு இதே ஸ்டைல் விறுவிறுப்பான நடை ,காந்தம் போன்ற சிரிப்பு இவையெல்லாம் இருந்திருக்கிறது. இதையெல்லாம் அவர் பீஷ்மர் உடைய கதாபாத்திரத்தில் செய்த பொழுது பார்வையாளர்கள் கைதட்டி ரசித்திருக்கிறார்கள் என்று தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினை என்னிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்து இருக்கிறார் என்று நடிகர் மாரிமுத்து கூறியிருக்கிறார்.

Most Popular