Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாநெல்சன் கதை சப்புனு இருக்கும்.. மேடையில் மானத்தை வாங்கிய நடிகர் மாரிமுத்து

நெல்சன் கதை சப்புனு இருக்கும்.. மேடையில் மானத்தை வாங்கிய நடிகர் மாரிமுத்து

ஜெயிலர் திரைப்படம் மாபெரும் ஹிட் அடைந்ததை அடுத்து தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக நெல்சன் வலம் வருகிறார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்தாலும் கடின உழைப்பும் மற்றும் நம்பிக்கை மூலம் இன்று நெல்சன் வெற்றி அடைந்திருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் நெல்சன் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் மாரிமுத்து குறித்து மேடையில் பேசி இருக்கும் காணொளி தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் நெல்சனின் முதல் படத்திலேயே நான் நடித்தேன். சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை அவர் எடுத்தார். அதிலும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நெல்சனை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும்.

- Advertisement -

அந்தப் படம் சில பல காரணங்களால் எடுக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு மீண்டும் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை எடுத்தார். நெல்சன் படத்தின் கதையை முதலில் நீங்கள் கேட்டால் சப்புன்னு இருக்கும்.

- Advertisement -

அதில் ஒரு சுவாரஸ்யமே இருக்காது. ரொம்பவே சுமாராக தான் இருக்கும். ஆனால் அந்தப் படத்தை அவர் எடுத்த பிறகு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். சார் இந்த படம் சூப்பராக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும். உலகமே கொண்டாடும் என்று அவரை பாராட்டினால் கூட சிறு புன்னகையுடன் கடந்து விடுவார்.

நெல்சனுக்கும் அனிருத்துக்கும் உள்ள நட்பு என்பது மிகவும் அபாரமானது. இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள். ஜெய்லரில் இடம்பெற்றுள்ள காவலா திரைப்படம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது.

ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இன்னொரு பெரிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. நேரம் வரும்போது உங்களுக்கு தெரியும் என நடிகர் மாரிமுத்து கூறியுள்ளார்.

Most Popular