Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஎவ்வளவு திமீர் இருக்கனும்.. ஞானவேல் ராஜாவை வறுத்து எடுத்த பொன்வண்ணன்

எவ்வளவு திமீர் இருக்கனும்.. ஞானவேல் ராஜாவை வறுத்து எடுத்த பொன்வண்ணன்

பருத்திவீரன் தொடர்பாக நடிகர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் தமிழ் சினிமாவில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. மிகப்பெரிய இயக்குனர் என்று பாராமல் ஞானவேல் ராஜா கூறிய சில கருத்துக்கள் தற்போது பொய் என பல்வேறு திரைப்பட பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஞானவேல் ராஜா தயாரிப்பாளராக இருந்தபோது பாதியிலே படத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அமிர் தாம் இந்த படத்தை தனது சொந்த செலவில் முடித்ததாகவும் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தின் நடித்த நடிகர் பொன்வண்ணன் அமீருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்

பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய
தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தாக கூறியுள்ளார்.
அத்திரைப்படத்தில் தாம் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அத்திரைப்படத்தில்  முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த  நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது என்று குறிப்பிட்ட பொன்வன்னன், அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது,
அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன் என்றும் பொன்வண்ணன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார்.
தானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் … ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான்  அமீர் வேலை பார்த்தார் என்றும் கூறியுள்ளார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த தனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது என்று பொன்வண்ணன் கூறியுள்ளார்.
இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும் என்று பொன்வண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும்  கிடைத்த  ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது என்று குறிப்பிட்டுள்ள பொன்வண்ணன்

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , இன்றுவரை பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் ,
தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்றார்.

உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக ..
திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று கண்டித்த பொன்வண்ணன்,
அந்த ஊடக பேட்டிமுழுக்க  உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது என்று சாடியுள்ளார்.

தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை  அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! என்று கேலி செய்த பொன்வண்ணன்,
வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை
இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள் என்றும் கூறியுள்ளார்.

உங்களின் இந்தபிரச்சனைக்கு “இடைப்பட்ட நாங்கள்” எவ்வளவு வேதனை அடைகிறோம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சுட்டிக்காட்டிய !பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற
ஆசைகளுடன் என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.

Most Popular