Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் பிரசாந்த் திருமாவளவன் சந்தித்தது ஏன் ..? இவரும் அரசியலுக்கு வரப் போகிறாரா..?

நடிகர் பிரசாந்த் திருமாவளவன் சந்தித்தது ஏன் ..? இவரும் அரசியலுக்கு வரப் போகிறாரா..?

பிரபல நடிகர் பிரசாந்த் தற்பொழுது தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் பிரசாந்திற்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் நடிப்பதோடு இல்லாமல் சில சமூக சேவைகளையும் செய்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் நடிகர் பிரசாந்த். சமீபத்தில் சாலை விபத்தில் தலைக்கவசம் அணியாததால் நிறைய உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு நிறைய இலவசமாக தலைக்கவசங்களை வழங்கி அணைவரையும்  திரும்பி பார்க்க வைத்தார் நடிகர் பிரசாந்த்.

அப்படி அவர் தலைக்கவசம் வழங்கும் பொழுது பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள் அவரிடம் நீங்கள் திடீரென்று இந்த சேவைகளை செய்ய என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர் இதனை காலம் காலமாக தான் செய்து வருகிறேன் என்று கூறிவிட்டார் .ஆனால் திடீரென்று இவர் செய்வது வெளியில் பிரபலமாகப்படுவதன் காரணம் இவர் ஒரு வேலை அரசியலில் ஈடுபட போகிறாரோ என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.

- Advertisement -

இந்த சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக தற்பொழுது நடிகர் பிரசாந்தும் அவருடைய தந்தை தியாகராஜனும் இணைந்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவனை சென்று சந்தித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் ஏன் திருமாவளவனை சென்று சந்தித்திருக்கிறார்கள் என்று கேள்வி இவர் அரசியல் வருகையை பற்றிய சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஆனால் தளபதி விஜய் அரசியலுக்கு வந்த போது நடிகர் பிரசாந்திடம் அதைப் பற்றி கேட்டதற்கு அவரும் நானும் நண்பர்கள் இதைப் பற்றி எல்லாம் நிறைய பேசியிருக்கிறோம் என்று கூறினார். மேலும் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்றதற்கு எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை என்று கூறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular