Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா ரசிகர்களை வெறுப்பேற்றும் வெற்றிமாறன்..! சூர்யா எடுத்த அதிரடி முடிவு

சூர்யா ரசிகர்களை வெறுப்பேற்றும் வெற்றிமாறன்..! சூர்யா எடுத்த அதிரடி முடிவு

நடிகர் சூர்யா வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படமாக கருதப்படுவது வாடிவாசல் தான். வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை எடுக்க இருக்கிறார்.

- Advertisement -

இந்தப் படத்திற்காக காளை மாடுகளை பராமரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தானுவும் கூறியுள்ளார். இந்த நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன் அங்கு நடைபெற்ற பணிகளை மேற்பார்வை செய்தார். இந்த நிலையில் வெற்றிமாறன் மீண்டும் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கு தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

சில காட்சிகளை மீண்டும் எடுக்க இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக வாடிவாசல் திரைப்படத்தை தொடங்கும் பணி தாமதமாகியுள்ளது. விடுதலை திரைப்படம் 2024 ஆம் ஆண்டு தான் ரிலீஸாகும் என தெரிகிறது.

இதனால் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் தொடங்க மீண்டும் தாமதமாகிறது. இந்த வேலையில் நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்திற்கு வரலாம் என நினைத்தார்.

தற்போது வெற்றிமாறன் பல்டி அடித்து இருப்பதால் கடுப்பாகி இருக்கும் சூர்யா வாடிவாசல் படத்திற்கு முன்பே வேறொரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில் இடைப்பட்ட காலத்தில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா கதை கேட்டு வருகிறார்.

இதனால் வாடிவாசல் திரைப்படம் வெளிவரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சூர்யா ரசிகர்கள் வெற்றிமாறன் உறுதி அளித்தபடி வாடிவாசல் படத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Most Popular