Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமா“கோவை சரளாவின் வளர்ச்சியை பிடிக்காத நடிகர் வடிவேலு” - வெளியான அதிர்ச்சி தகவல்

“கோவை சரளாவின் வளர்ச்சியை பிடிக்காத நடிகர் வடிவேலு” – வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணியின் நகைச்சுவை நடிகையாகவும், சிறந்த குணசித்திர நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை கோவை சரளா. இவர் தன்னுடைய திரை வாழ்வை மேடை நாடகத்திலிருந்து ஆரம்பித்தார். இவரும் வடிவேலும் இணைந்து நடித்த அந்த படம் வெற்றி பெறும் என்ற அளவுக்கு இருந்தது. தற்பொழுது இவருக்கான வாய்ப்புகளை தட்டிப் பறித்தது நடிகர் வடிவேலு தான் என்று செய்யார் பாலு கூறி இருக்கிறார்

- Advertisement -

பள்ளி செல்லும் நாட்களிலே மேடை நாடகங்களில் கலந்து கொண்டு பெரியவர்களிடம் பாராட்டுகளை பெற்றார் அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வரும் சிறந்த நடிகருமான எம்ஜிஆர் அவர்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார் கோவை சரளா.

இவருக்கு தமிழ் திரை உலகில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது முதல் வாய்ப்பு கிடைத்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு கிடைத்த 32 வயது பெண்மணி ஆக நடிக்கும் வாய்ப்பில் சிறப்பாக நடித்திருந்தார் அந்த திரைப்படம் தான் இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் மற்றும் நடிகர் வடிவேலு இணைந்து நடித்தால் அந்த இடத்தில் காமெடி கலை கட்டும் என்பதால் இவர்கள் என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் ஒரு சில சந்தர்ப்பவாதங்களால் கோவை சரளா இருக்கு அடுத்தடுத்த காலங்களில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

- Advertisement -

சினிமா பத்திரிகையாளர் செய்யார் பாலு கோவை சரளா பற்றி பேசும் போது “மனோரமா ஆச்சி எப்படி ஒரு பெண் சிவாஜி என்று அனைவராலும் பாராட்ட பட்டாரோ அப்படி கோவை சரளாவை பெண் கமல்ஹாசன் என்று சொல்லலாம். அவரிடம் இயக்குனர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தூக்கி சாப்பிட்டு விடுவார். கோவை சரளா மேடை நாடகத்தில் பேசியதைப் பார்த்து வியந்து போன எம்ஜிஆர் அவரை வெகுவாக பாராட்டினார்” என்று பேசினார்.

வடிவேலு மற்றும் கோவை சரளா

வடிவேலு மற்றும் கோவை சரளா இணைந்து நடிப்பது குறித்து செய்யார் பாலு பேசும்போது “வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர்கள் இருவரும் திரையில் வந்தாலே திரையரங்கில் கைத்தட்டல் அள்ளும். ஆனால், வடிவேலுவிற்கு கோவை சரளா தன்னைவிட வளர்வது பிடிக்காததால், அதன் பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. வடிவேலுவிற்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு அது என்னவென்றால், தன்னை விட யாரும் பெயர் எடுத்துவிடக்கூடாது அப்படி பெயர் எடுத்துவிட்டால் அதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

ஒரு கட்டத்தில் கோவை சரளாவால் தான் வடிவேலுவிற்கு படவாய்ப்பு வருகிறது என்ற பேச்சு பரவியதை வடிவேலுவால் ஏற்றுக்கொள்ள அவர் கொஞ்சம் கொஞ்சமாக கோவை சரளாவை அவரது படங்களில் இருந்து விளக்கினார்.யாராவது கோவை சரளாவுடன் தான் சேர்த்து நடிக்க வேண்டும் என்று கேட்டால், நான் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றும், தன் தனியாக நடித்தாலே பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பல இயக்குநர்களிடம் கூறியிருக்கிறார் வடிவேலு. இதனால் கோவை சரளாவுக்கு படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” என்று பேசியிருந்தார்.

சினிமா பத்திரிகையாளர் செய்யார் பாலு இவ்வாறு பேசி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular