நடிகர் விஜயுடன் 14 ஆண்டுகள் கழித்து வையாபுரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் வையாபுரி ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு வையாபுரி படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட்டானதை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் நடிகர் வையாபுரி தாமும் உங்கள் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்காக வாய்ப்பு கொடுங்கள் என கேட்டுக் கொண்டிருந்தாராம்.
இதனை அடுத்து லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் வையாபுரி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சூட்டிங் இருக்கு சென்ற வையாபுரியை நடிகர் விஜய் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
நடிகர் வையாபுரியை வரவேற்று கட்டி அணைத்த விஜய் உங்களுடன் பணிபுரிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. உங்களுடன் நடிக்க நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விஜய் கூறினாராம்.
சுமார் ஒரு வாரம் இந்த படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இதில் நடிகர் வையாபுரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறியுள்ளார். வழக்கமாக இருக்கும் கதாபாத்திரம் போல் இல்லாமல் இதில் ஒரு வித்தியாசமான வையாபுரியை நீங்கள் பார்ப்பீர்கள் என அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் வையாபுரியும் இணைந்து கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளியான வில்லு திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அதன் பிறகு தற்போது தான் இருவரும் இணைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வையாபுரியும் விஜயும் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் வையாபுரிக்கு ஏதாவது ஏஜென்ட் கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பார் என கிண்டல் செய்து வருகிறார்கள்.
மேலும் சிலர் படம் நிச்சயமாக கஞ்சா சம்பந்தப்பட்டதாக இருக்கும். இதனால் வையாபுரி கஞ்சா விற்கும் நபராக கூட படத்தில் தோன்றலாம் என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதனிடையே நான் ரெடி என்ற பாடல் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த பாடலை நடிகர் விஜய்யும் அசல் கோளாறும் சேர்ந்து பாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.