Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரியல் ஹீரோவானார் தளபதி விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி

ரியல் ஹீரோவானார் தளபதி விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி

“பிற துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்” என்ற தன்னுடைய பாடல் வரிகளுக்கு ஏற்றார் போலவே தலைவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

- Advertisement -

தென் தமிழகமாகிய தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து தம் உடைமைகளையும் பல உயிர்களையும் இழந்து இருக்கிறார்கள்.

எத்தனையோ காணொளிகளை பார்த்து கருத்து தெரிவித்தும் எக்ஸ் பக்கத்தில் ட்விட் போட்டுக் கொண்டும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்திய பிரபலங்களுக்கு மத்தியில் தானாக களம் இறங்கி தற்பொழுது உதவ
வந்திருக்கிறார் தளபதி விஜய்.

- Advertisement -

தன்னிடம் இருக்கும் சொத்துக்களை என்ன செய்வதென்று தெரியாமல் வைத்திருக்கும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள் . இந்நிலையில் நடிகர் விஜய் செய்யும் இந்த சேவை மக்களால் பாராட்டப்பட்ட வருகிறது.

- Advertisement -

மாளிகையில் அமர்ந்து கொண்டு சில உதவித்தொகைகளை மட்டும் மக்களுக்காக கொடுக்கிறேன் என்றெல்லாம் விளம்பரம் செய்து கொள்ளாமல். எந்த முன்னறிவிப்புமே இன்றி தூத்துக்குடிக்கு நேரிலே வருகை தந்திருக்கிறார் தளபதி விஜய்.

நெல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது . விஜய் நேராக வந்து அனைவருக்கும்  உணவுப் பொருட்கள் பணம் என சுமார் 1500 குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.

மேலும் வெள்ள அபாயத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு 25000 வரை உதவித்தொகையை வழங்கி இருக்கிறார் தளபதி விஜய். இவருடைய இந்த செயல் மக்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Most Popular