திரைப்படங்களில் கலகலப்பாக பேசி நடித்து வரும் தளபதி விஜயின் சொந்த வாழ்வில் தீராத ஒரு சோகம் அவருக்கு இருக்கிறது என்பது அனைவரும் தெரிந்த உண்மைதான். அவருடைய அன்பு தங்கை வித்யா சிறு வயதிலேயே உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அவர் இன்றும் மறக்கவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த நடிகர் விஜய் தன் தங்கையின் மரணத்திற்குப் பிறகு அமைதியாகிவிட்டார் என்பதை பல இடங்களில் அவருடைய பெற்றோர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.அதை அவருடைய ரசிகர்களான நாமும் பார்த்து வருகிறோம்.
இதன் மூலம் அவர் இன்னும் நான் நிகழ்வை மறக்கவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.இதையெல்லாம் ஒரு புறம் இருக்க அவர் வாய் திறந்து ஒரு பொழுதும் தன் தங்கையை பற்றி எந்த மேடையிலும் பேசியது இல்லை. அப்படி பேசி இருந்தால் ஒரு வேலை அந்த பாரம் குறைந்திருக்குமோ என்னவோ.
எப்படி நடிகர் விஜய்க்கு தன் தங்கை மீது இருக்கும் பாசத்தை தளபதி ரசிகர்கள் புரிந்து கொண்டு நடிகர் விஜய்யின் தங்கை பேரான வித்யா என்ற பெயரில் ஒரு பள்ளியை நிறுவி அதை நடத்தி வருகிறார்கள். அந்தப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற இருக்கிறார்கள்.
இது அறிந்த தளபதி விஜய் அந்தப் பள்ளியின் நிர்வாகத்தை அழைத்து இனி இந்த பள்ளிக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்களித்திருக்கிறார். நல்ல மாணவர்களை உருவாக்குவதற்காக இந்த பள்ளியை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஏறத்தாழ 234 தொகுதிகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை ஜூன் மாதம் சந்திக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சினிமா உலகின் முதன்மையான கதாநாயகனாக இருக்கும் தளபதி விஜய், இது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருவதால் தளபதியின் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் இவர் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 68 ஆவது படத்தையும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கப் போவதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இப்படி தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அள்ளித் தெளித்து வருகிறார். தளபதி விஜய் தற்பொழுது இவருடைய ரசிகர்கள் லியோ திரைப்படத்தை எப்பொழுது திரையில் பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள் .இந்த நிலையில் கூடுதல் மகிழ்ச்சியாக தளபதியின் 68வது திரைப்படத்தைப் பற்றிய தகவல் வந்தது சிறந்த செய்தியாகும்.