Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாகோப்ரா இயக்குனர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.. விக்ரம் கொடுத்த சர்பரைஸ்

கோப்ரா இயக்குனர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.. விக்ரம் கொடுத்த சர்பரைஸ்

- Advertisement -

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரபலமானவர் நடிகர் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் சீயான் என்ற கதாபாத்திரத்தில் துடிப்பு நிறைந்த எதார்த்தமான நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. இதனால்தான் இன்று வரையிலும் சீயான் விக்ரம் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை பொறுத்துக் கொண்டு நடிக்கும் ஆற்றல் மிகுந்தவர் நடிகர் விக்ரம்.

சேதுவிற்கு பிறகு பல இயக்குனர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் நிறைய வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். பிதாமகன் திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அன்னியன் திரைப்படம் மூலம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இப்படி பல புகழ்களை கொண்ட நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் அஜய் ஞான முத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தை நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.மேலும் இதில் இர்பான் பதான், மின்னாலினி ரவி ஆகியோர் துணை நடிகர்களாக கோப்ரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதனால் இந்த திரைப்படத்தின் பாடல்களை வெற்றி பெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த படத்தில் இருந்து இணையதளங்களில் வெளியான தும்பி துள்ளல் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

- Advertisement -

இதைப் பற்றிய அப்டேட்கள் ட்விட்டர் பகுதிகளில் வெளியாகி வருகிறது. மேலும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமான படைப்பாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து பா ரஞ்சித்தின் உடைய இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பதால் நடிகர் விக்ரம் என் ரசிகர்கள் இதற்கு சியான் 61 என்று அழைக்கிறார்கள்.

இந்த நிலையில் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நடிகர் விக்ரம் பங்கேற்ற ஸ்பேஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நடிகர் விக்ரம்,ஸ்ரீனிதி செட்டி, இர்பான் பதான்,இயக்குனர் அஜய் ஞானமுத்து உள்ளிட்டோர் பேசியதை கேட்டனர்.அப்போது நடிகர் விக்ரம் ஒரு சர்ப்ரைஸ் ஆன அறிவிப்பை ரசிகர்களுக்கு கொடுத்தார். அதில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் திறமை தம்மை மிகவும் ஈர்த்துவிட்டதாகவும் அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் விக்ரம் பாராட்டினார்.இதனால் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் டிவிட்டரில் நடிகர் விக்ரம் தெரிவித்திருந்தார்.நடிகர் விக்ரமின் ரசிகர்கள் நடிகர் விக்ரமிற்கு அடுத்தடுத்து படம் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியிலும் அந்தப் படங்களை திரையரங்குகளில் பார்ப்பதற்கு மிகவும ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Most Popular