Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாகணவர் ஆபாசமாக மெசஜ் பண்றாரு.. சின்னத்திரை நடிகை ரட்சிதா போலீஸில் புகார்

கணவர் ஆபாசமாக மெசஜ் பண்றாரு.. சின்னத்திரை நடிகை ரட்சிதா போலீஸில் புகார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சிக்கு அறிமுகமானவர்தான் சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி. இவர் நடித்த தொடரில் இது முதல் தொடர் என்றாலும் இவரை அதிகமாக பிரபலப்படுத்தியது சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாவது பாகம்தான்.

- Advertisement -

அதில் நடிகர் ரியோவின் மனைவியாக நடிகை ரட்சிதா நடித்திருப்பார். சரவணன் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் அந்தத் தொடரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

- Advertisement -

அந்த தொடரின் மூலம் நடிகை ரட்சிதா தமக்கென பல ரசிகர்களை குவித்தார். இதற்கு முன்பு இவர் நடித்த பிரிவம் சந்திப்போம் என்று தொடரில் தனது துணையாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து பின் 2015 ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய பணியில் தீவிரமாக இருந்தார் ரட்சிதா. சரவணன் மீனாட்சி தொடருக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் தினேஷ் உடனே நாச்சியார் புரம் என்ற தொடரில் நடித்து வந்தார். இந்தத் தொடர் ஜீ தமிழ் ஒளிபரப்பானது .இந்த தொடர் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் கொரோனா தோன்றியதால் பாதியிலேயே இத்தொடர் நிறுத்தப்பட்டது.

அதற்குப் பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை சில நாட்களாக தினேஷ் ரட்சிதாவும் பிரிந்து விட்டார்கள் என்ற தகவல் பெருமளவில் பரவி வந்தது. இந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸில் நடிகை ரச்சிதா பங்கு பெற்றார்.

அதில் அவர் ஒருபோதும் தன் கணவரை பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. சொந்த வாழ்வை பற்றி அதிகம் ரட்சிதா வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. அதே ஷூவில் சகப் போட்டியாளராக வந்த ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை எனக்கு பிடிக்கும். நான் சீரியல் பார்க்க ஆரம்பித்ததே ரட்சிதாவை பார்த்த பிறகு தான் என்றெல்லாம் கூறி இருக்கிறார்.

ரட்சிதாவை ராபர்ட் மாஸ்டர் நேசித்ததை எத்தனையோ முறை வெளிப்படுத்தியும் இருக்கிறார். அதை எதுவும் ரட்சிதா கண்டு கொண்டதே இல்லைம் அவருடைய பணியில் அவர் சரியாக இருந்ததால் இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதற்குப் பிறகு நடிகை ரட்சிதாவின் மீது அனைவருக்கும் நிறைய மரியாதையும் ஏற்பட்டது. ஒரு இடத்தில் நடிகை ரட்சிதாவின் சொந்த வாழ்வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் ஆசை ஆக இருக்கிறது என்று கூறிய போது நடிகை ரட்சிதா தன்னுடைய தாய் தந்தையை பற்றியும் தான் பிறந்து வளர்ந்ததைப் பற்றியும் கூறினார். அதை தவிர தன் திருமண வாழ்வை பற்றி ஒரு இடத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

அப்படிப்பட்ட ரட்சிதாவிற்கு கடந்த சில நாட்களாக அவரை விட்டு பிரிந்து இருக்கும் கணவர் தினேஷ் ஆபாசமாக மெசேஜ் செய்கிறார் என்றும் தொலைபேசியிலும் ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கின்றார் என்றும் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை ரட்சிதா புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எதுக்கு அவருடைய கணவர் தினேஷ் நாங்கள் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை. தற்காலிகமாக பிரிந்து இருக்கிறோம். எங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அப்படி இரட்சிதாவிற்கு என்னோடு வாழ மனமில்லை என்றால் தாராளமாக விவாகரத்துக்கு அணுகட்டும் என்று கூறியிருக்கிறார்.

Most Popular