சினிமா

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி.. நிவின் பாலி, சாய் பல்லவியின் காதல் கதை

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி பல்வேறு சாதனைகளை படைத்தது. கேரளாவில் முதல் 100 கோடி வசூலை பெற்ற படம் என்ற பெருமையும் பிரேமம் படைத்தது. இந்த படத்தில் நிவின் பாலி ,சாய் பல்லவி ,மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்தனர்.

Advertisement

இந்த படத்தின் நடித்த அனைவரும் தற்போது இன்று பெரிய அளவில் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். கேரளாவை விட தமிழகத்தில் இந்த படத்திற்கு என அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. கேரளாவில் படத்திற்கான சப்டைட்டில் எழுதுவதில் பிரபலமான நபர் விவேக் ரஞ்சித். இவர் கடந்த எட்டு ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பிறகு ஒரு கதையை எழுதி இருக்கிறார்.

தற்போது இந்த கதை நடிக்க நிவின் பாலி ஒப்புக்கொண்டுள்ளார். இதனை வினை கோவிந்த் என்ற இயக்குனர் எடுக்க உள்ளார். இவர் கிளி போய், கோகினூர் போன்ற திரைப்படங்களில் இயக்கியவர் ஆவார். இந்தப் படத்தில் பிரித்திவிராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு எடுக்கப்படுவதாக இருந்தது.ஆனால் பல பிரச்சனைகள் காரணமாக தடைப்பட்டு போன இந்தப் படம் தற்போது மீண்டும் தொடங்க உள்ளது.

Advertisement

இந்த படத்திற்கு தாரம் என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் மலையாளத்தில் ஏற்கனவே ஒரு படம் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தாரம் படம் குறித்து விவேக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் எழுதிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் 8 ஆண்டுகளாக இந்த கதையை எழுதி படமாக்க தாம் முயற்சித்து வருவதாகவும், இந்தப் படம் நிச்சயம் மக்களுக்கு பொழுதுபோக்காக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தப் பதிவு எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் தற்போது பணம் மீண்டும் எடுக்கப்பட உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிவின் பாலி, சாய் பல்லவி ஜோடி இணைவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top