Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமா“பீட்டர் பால் என் கணவரே இல்ல ” - இத்தோட நிறுத்தி விடுங்கள் ஊடகங்களை எச்சரித்த...

“பீட்டர் பால் என் கணவரே இல்ல ” – இத்தோட நிறுத்தி விடுங்கள் ஊடகங்களை எச்சரித்த நடிகை வனிதா விஜயகுமார்

நடிகர் அருண் விஜயின் சகோதரியும் நடிகையுமான வனிதா விஜயகுமாருடைய கணவரான பீட்டர் பால் மரணம் என்ற செய்தி பரவ வனிதா, பீட்டர் பால் என்னுடைய கணவர் அல்ல என்று பேட்டி அளித்துள்ளார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் மக்களுக்கு பழக்கப்பட்ட முகமாக தன்னை மாற்றிக் கொண்டு அனைவரிடமும் அறிமுகமானார் நடிகை வனிதா. இவர் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளாவார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா தனக்கு மூன்றாவது கணவராக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பாலும் தன்னுடைய இரண்டாவது மனைவியாக வனிதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களுக்கு இருவரும் தெரிந்து விட்டார்கள்.

- Advertisement -

இதற்கு வனிதா தரப்பில் இருந்து பீட்டர் பால் ஒரு குடிகாரர் என்றும், வனிதாவிற்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பதும்,பிரிவிற்கு காரணமாக கூறப்பட்டது இதை பீட்டர் பாலும் மறுக்கவில்லை.

- Advertisement -

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்தால், இந்த செய்தி மீடியாக்கள் அனைத்திலும் வனிதாவின் கணவர் பீட்டர் பால் மரணம் அடைந்து விட்டார் என்று செய்து பரவியது. அவருடைய மறைவிற்கு காரணம் என்னவென்று பார்க்கையில் அவருடைய குடிப்பழக்கமும் அவருக்கு திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வனிதாவின் கணவர் பீட்டர் பால் என்ற பரவிய செய்திக்கு இன்ஸ்டாகிராம் பதிவில் வனிதா கூறியிருப்பது ” அதிக நேரம் யோசித்து இந்த முடிவிற்கு வந்துள்ளேன். அனைத்து பத்திரிக்கை மற்றும் மீடியாக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதை தவிர எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. நான் மறைந்த பீட்டர் பாலை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 2020 ஆம் ஆண்டில் சில மாதங்கள் இருவரும் சுருக்கமான உறவில் இருந்தோம். அந்த உறவு அன்றோடு முடிந்து விட்டது ” என்று கூறி இருந்தார்.

மேலும் அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது ” சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளாதால் நான் அவருடைய மனைவியோ அவர் என்னுடைய கணவரோ ஆக மாட்டார். இத்தோடு என் கணவர் இறந்து விட்டார் என்று செய்தி பரப்புவதை ஊடகங்கள் அனைத்தும் நிறுத்திக் கொள்ள வேண்டும், நான் சட்டபூர்வமாக தனிமையில் இருந்து வருகிறேன், எனக்கு கணவர் இல்லை நான் இழக்கவும் இல்லை. நான் தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்” என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்

Most Popular