Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் …! ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஷாக்கிங் புகைப்படத்தின் இணைப்பு உள்ளே!

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் …! ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஷாக்கிங் புகைப்படத்தின் இணைப்பு உள்ளே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இவர் நடிகர் தனுசை திருமணம் செய்தார் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் . தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தங்களது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்றனர் . தனுஷ் தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் . ஐஸ்வர்யா திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . இருவருமே தங்களது தனிப்பட்ட வாழ்வின் பிரச்சனைகளைக் கடந்து தங்களது கேரியரில் கவனம் செலுத்தி மும்முறமாக படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர் . தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த வருகிறார் . இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் 50-வது திரைப்படத்தை அவரை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

மூணு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் விவேக் நடிப்பில் வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார் . இந்த இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது . இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டாய், ஐஸ்வர்யா ரஜினி தற்போது மீண்டும் திரைப்படத்தை இயக்க தொடங்கியுள்ளார் . இவரது இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்து இருக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது .

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார் இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்தத் திரைப்படத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு அவருக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது . ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்த கையோடு தனது மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கி விட்டார் சூப்பர் ஸ்டார் .

- Advertisement -

விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது . இந்தத் திரைப்படத்திற்காக அயராது உழைத்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி . மேலும் அவர் தனது பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் . தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் சமீபத்தில் தனது சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கின்றனர் .

- Advertisement -

இதுவரை முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களின் லைக்ஸ் பெற்றிருக்கும் அந்த புகைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தா இது என்று கேட்கும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் கருத்துப் போய் இருக்கிறார் இந்தக் கடுமையான வெயில் காலத்திலும் முபாரமாக அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் காரணமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முகம் கருப்பாக மாறி உள்ளது . இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கும் அவர் உனக்கு எது தேவை என்பதை மட்டும் பார் , நீங்கள் எதை பார்க்க வேண்டும் என்று இருக்கிறது அதை மட்டுமே பார்ப்பீர்கள் …. வேலையை நேசிக்கிறேன் ” என்ற வாசகங்களுடன் அந்தப் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் . வேலை வேலை என்று இருக்காதீர்கள் உங்கள் உடல் நலனிலும் கவனம் செலுத்துங்கள் என ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர் .

Most Popular