Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஒரு இளம் இயக்குனருக்காக அஜித் செய்த உதவி.. வேறு எந்த ஹீரோவும் செய்து இருக்க மாட்டாங்க

ஒரு இளம் இயக்குனருக்காக அஜித் செய்த உதவி.. வேறு எந்த ஹீரோவும் செய்து இருக்க மாட்டாங்க

தமிழ் சினிமாவில் அஜித்துக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் இருக்கிறார்கள். அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி அவரின் நல்ல மனதுக்காக பலரும் அவரை பாராட்டுவது உண்டு. இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா நடிகர் அஜித், தேவயானி ஆகியோரை வைத்து தொடரும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

- Advertisement -

நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்பட வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும். ஏனென்றால் அவர் இயக்கிய முதல் படம் அதுதான் நகைச்சுவை நடிகராக துணை நடிகராக காமெடி நடிகராக அறியப்பட்ட ரமேஷ் கண்ணா பலமுறை போராடி தொடரும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அப்போது முதல் நாள் ஷூட்டிங்கின் போது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து போன் வந்து தங்களை ஒரு அரை நாள் வந்து சந்தியுங்கள் என்று கூறியிருந்தார்களாம். ஆனால் ரமேஷ் கண்ணா தற்போது தான் முதல்முறையாக இயக்குனர் ஆகி அஜித்தை வைத்து படம் எடுப்பதால் தான் எப்படி முதல் நாளை வர முடியும் என்று கூறிவிட்டு அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

- Advertisement -

ஆனால் தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் ரமேஷ் கண்ணா முழித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது இதனை பார்த்து நோட் செய்த அஜித் ஏன் இவ்வளவு டென்ஷனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டாராம். அதற்கு தமக்கு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கால் வந்திருப்பதாகவும் அவர்கள் தம்மை அரை நாள் வந்து சந்திக்க கூறியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் .

- Advertisement -

ஆனால் முதல் நாளிலே ஒரு இயக்குனராக இருந்து கொண்டு எவ்வாறு செல்ல முடியும் என்றும் அவர் அஜித்திடம் தன்னுடைய நிலையை கூறியிருக்கிறார். இதற்கு நடிகர் அஜித் இதற்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள். நீங்கள் சென்று ஒரு அரை நாள் கழித்து வாருங்கள் நான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினாராம்.

இதை கொஞ்சமும் கூட எதிர்பார்க்காத ரமேஷ் கண்ணா அஜித்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு தன்னுடைய பணியை முடித்துக் கொண்டாராம். அஜித் அவ்வாறு செய்யவில்லை என்றால் தமக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெரிய வாய்ப்பு தவறிப் போயிருக்கும் என்றும் ரமேஷ் கண்ணா கூறி இருக்கிறார்.

Most Popular