சினிமா

வாலியில் வர வேண்டிய சூப்பர் சீன்.. அஜித் நோ சொல்லிட்டாரு!

நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்த படம் வாலி அண்ணன் தம்பி என இரண்டு கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கும் நடிகர் அஜித்தின் இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர் மனதில் நீங்காதவை.  இந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நடிகரும்மான மாரிமுத்து இந்த படம் குறித்து பல்வேறு வெளிவராத கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

அதில் எஸ் ஜே சூர்யா திறமையான இயக்குனர் என்றும் உணர்ச்சி வசமான காட்சிகளை எடுப்பதில் வல்லவர் என்றும் கூறியுள்ளார். வாலி திரைக்கதையில் ஒரு சூப்பர் சீன் இருந்ததாகவும் ஆனால் அதனை எடுக்க முடியவில்லை என்றும் கூறினார் .மனைவி சிம்ரன் தன் கணவன் என்று அண்ணன் அஜித்தை கட்டிப்பிடித்து விட அதை நினைத்து அவர் பெட்ரூமில் அழுது கொண்டிருக்கும் போது அங்கிருந்து கணவர் அஜித் முகமூடி மாட்டிக்கொண்டு உள்ளே நுழைவது போலவும் அதை பார்த்து சிம்ரன் பயப்படும் போது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

திடீரென்று அஜித் முகமூடி தூக்கி விட்டு பார்த்தால் அதில் கணவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக மீசையை எடுத்துக் கொண்டதை சிம்ரன் பார்த்து மகிழ்ச்சி அடைவார். இதனை தொடர்ந்து குழப்பத்தை தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அண்ணன் அஜித்திடம் தம்பி அஜித்தும் சிம்ரன் போய் சொல்லும் போது அவரும் மீசை எடுத்து இருப்பார். இதை பார்த்த தம்பி அஜித் என்ன மாதிரியே நீயும் யோசித்திருக்காயே என்று சிரித்து விட்டு செல்வார். இந்த காட்சி நன்றாக இருந்தது.ஆனால் படத்தில் நாங்கள் எடுக்கவில்லை.

Advertisement

இதற்கு காரணம் நடிகர் அஜித் மீசையை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார். இந்த காட்சியை எடுப்பதற்காக எஸ்.ஜே சூர்யா பல முயற்சிகளை செய்தார். படம் முழுமையாக முடித்துவிட்டு கடைசி சீனாக இதை எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார். ஆனால் அதற்கும் அஜித் ஒப்புக்கொள்ளவில்லை. இது போன்று ஆறு காட்சிகள் சூப்பராக பரமாக்கப்பட இருந்தது .ஆனால் அதற்கு அஜித் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் மாரிமுத்து குற்றம் சாட்டியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top