Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமோசமான நோய்.. யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.. சினிமாவில் இருந்து விலகும் பிரேமம் பட இயக்குனர்...

மோசமான நோய்.. யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.. சினிமாவில் இருந்து விலகும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மெசேஜை அவர் பதிவிட்டு அது ஒரு சில நிமிடங்களிலேயே அதனை டெலீட்டும் செய்துவிட்டார்.

- Advertisement -

நேரம் எனும் தமிழ் – மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பின்னர் முதல் படத்தை விட பல மடங்கு பெரிய வெற்றித் திரைப்படத்தை கொடுத்தார். அது தான் நேரம். சுமார் ஒரு வருடம் திரையரங்கில் ஓடியது.

இந்த இரு படங்களுக்கு பிறகு அவர் ‘ அவியல் ’ எனும் ஆந்த்தாலஜி படத்தில் ஓர் எபிசோட்டை செய்தார். பல வருடங்கள் கழித்து சென்ற ஆண்டு ‘ கோல்ட் ’ படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதுமட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்கு தன் படத்தை பார்க்க போதிய அறிவு இல்லை என அல்போன்ஸ் புத்திரன் குற்றம் சாட்டியது சலசலப்பை உண்டாக்கியது.

- Advertisement -

கோல்ட் ரிலீசுக்கு பின்னர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைத்தளத்தில் விசித்திரமாக காணப்பட்டார். ஆசல் இன்று சீரியசான ஒரு விஷயத்தை உடைத்து ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளித்துள்ளார். அவர் தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் குறிப்பிட்டதாவது, “ நான் முழு நீளப் படம் எடுப்பதில் இருந்து ஓய்வுப் பெற முடிவு செய்துள்ளேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் இருப்பதை நான் அறிய வந்துள்ளேன். யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. ” என்றார்.

- Advertisement -

மேலும், “ இருப்பினும் நான் தொடர்ந்து பாடல்கள், குறும் படங்கள் செய்ய போகிறேன். பெரும்பாலாக அது ‌ஓடிடி தளத்தில் வரும். நான் முழுமையாக சினிமாவை விட மாட்டேன், ஏனென்றால் எனக்கு அதனை விட்டால் எதுவும் இல்லை. ” எனக் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது சாண்டி மாஸ்டர், கோவை சரளா, சந்தியாவை வைத்து ஓர் படத்தை இயக்கி வருகிறார். அது முடித்தப் பிறகே அவர் பெரிய படங்களில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த பதிவை அவர் போஸ்ட் செய்த சில நிமிடங்களிலேயே நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular