சினிமா

தனுஷ்க்கும் அனிருத்துக்கும் மோதலா? கோலிவுட்டில் சலசலப்பு

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கி வருபவர் அனிருத்.  பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள் மனதில் முதலில் வரும் பெயர் அனிருத் தான்.  ஒரு காலத்தில் ஏ ஆர் ரகுமான் எப்படி இருந்தாரோ அதேபோல் அனிருதும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Advertisement

விஜய், அஜித் ,ரஜினி ,கமல் என முன்னணி நட்சத்திரங்கள் அனிருத் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அனிருத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் தனுஷ்க்கு தான் சேரும். நடிகர் தனுஷ் தனது மூன்று படத்தின் மூலம் அனிருத்துக்கு வாய்ப்பு வழங்கினார்.

அதன் பிறகு தனுஷ் அனிருத் கூட்டணி என்றாலே அந்தப் படம் பாடல் செம ஹிட் ஆகிவிடும். இன்றுவரை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் லோகோவுக்கு இன்னும் தனுஷ் அனிருத் இசை தான் பயன்படுத்தி வந்தார்.

Advertisement

இருவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிலையில் நடிகர் தனுஷ் அனிருத் கூட்டணி பிரிந்தது. இதன்பிறகு மீண்டும் திருச்சிற்றம்பலம் படத்தில் இருவரும் இணைந்தனர். அந்தப் படத்தின் பாடலும் செம ஹிட் ஆனது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் முதலில் அனிருத் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆனால் தற்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மீண்டும் தனுஷ் அனிருத்துக்கு மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அனிருத் தொடர்ந்து படங்களில் இசையமைத்து வருவதால் அவருக்கு இந்த படத்தில் பணியாற்ற நேரம் இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் தற்போது ஏ ஆர் ரகுமான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் ஏ ஆர் ரகுமான் டேட் இல்லை என்று மற்ற இசையமைப்பாளர்களிடம் இயக்குனர்கள் சென்ற நிலையில் தற்போது அணிருடன் டேட் இல்லை என்று ஏ ஆர் ரஹ்மானிடம் வரும் காலம் வந்து விட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top