சினிமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஏ ஆர் முருகதாஸ்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் இளைய தளபதி!

தமிழ் சினிமாவின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். டிவி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் தொடர்ந்து டாக்டர் , டான் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மட்டும் தமிழகத்தில் 83 கோடி அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த பிரண்ஸ் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. தமிழகத்தில் மொத்தமாகவே 26 கோடி ரூபாய் தான் அந்த படம் வசூல் செய்தது. இதனால் மீண்டும் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற வித்தியாசமான திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்  பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி வரும் ஏ ஆர் முருகதாஸுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற வெற்றி படங்களை கொடுத்த முருகதாஸ் தற்போது அடுத்த விஜய் என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயனுடன் சேர இருப்பது திரைப்பட வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நல்ல ஜனகரஞ்சமான ஆக்சன் திரில்லர் கதையை சிவகார்த்திகேயனுக்காக ஏ ஆர் முருகதாஸ் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

தர்பார் படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. நடிகர் விஜய்யுடன் இணைந்து மேற்கொள்ள இருந்த ப்ராஜெக்ட்டும் கைவிடப்பட்டது. இதனால் இளம் தலைமுறை நடிகரை தேர்வு செய்த ஏஆர் முருகதாஸ் தற்போது தமிழ் தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜுடன் கைகோர்த்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படம் முடிந்தவுடன் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை மையமாக வைத்து திரைக்கு வர இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top