Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஎன் தந்தை ஏமாற்றினாரா? இதுல்லாம் மறந்து போச்சா?  ரஹ்மானுக்காக களத்தில் இறங்கிய மகள்

என் தந்தை ஏமாற்றினாரா? இதுல்லாம் மறந்து போச்சா?  ரஹ்மானுக்காக களத்தில் இறங்கிய மகள்

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடத்திய இசைக் கச்சேரி மோசமான முன்னேற்பாடுகள் காரணமாக பெரும் சர்ச்சையில் சிக்கியது.

- Advertisement -

இதற்கு தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள ரஹ்மான் மக்களுக்கு நேர்ந்த பிரச்சினைகள் என் மனதை காயப்படுத்தி விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் பணத்தை திருப்பி தருவதாகவும் ரகுமான் அறிவித்துள்ளார்.

எனினும் ரஹ்மானை சிலர் மோசமாக விமர்சித்து வருகிறார்கள் குறிப்பாக பாஜகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ரஹ்மானை மதரீதியாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு ரகுமான் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தனது தந்தைக்காக மகள் கதீஜா சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அதில் நேற்று இரவில் இருந்து அனைத்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ரஹ்மானை மோசடிக்காரர் போல் சித்தரிக்கிறார்கள்.

- Advertisement -

சிலர் அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள். நேற்று நடைபெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனியார் அமைப்பு மீதுதான் சேரும். ஆனால் ரகுமான் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

2016 ஆம் ஆண்டு தமிழக மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்டபோது நெஞ்சே எழு என்று கலை நிகழ்ச்சியை சென்னை, கோவை, மதுரை ஆகியவற்றில் நடத்தினார். 2018 ஆம் ஆண்டு கேரள மக்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்காக பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் பலருக்கு உதவிகளை ரஹ்மான் செய்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு சினிமாவில் பணிபுரியும் நிபுணர்களுக்காக இலவசமாக ஒரு இசை கச்சேரியை நடத்தி அவர்களுக்கு உதவினார். இதையெல்லாம் யோசித்துப் பிறகு பேசுங்கள் என்ற பதிவை கதீஜா வெளியிட்டு இருக்கிறார்.

Most Popular