Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமா“தமிழ் வராதா? வீட்டுல என்ன பேசுவாங்க?” - தனது மனைவி குறித்து பேசிய கஸ்தூரிக்கு பதிலடி...

“தமிழ் வராதா? வீட்டுல என்ன பேசுவாங்க?” – தனது மனைவி குறித்து பேசிய கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த ஏ ஆர் ரகுமான்

இந்திய மற்றும் உலக சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் ஏ.ஆர் ரகுமான். இந்தியாவின் ஆஸ்கார் நாயகன் அனைவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டும் ஹிந்தி என பல்வேறு இந்திய மொழிகளிலும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் . சமீபத்தில் இவரது இசையில் வெளியான பத்து தல என்ற திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றது இன்று இவரது இசையமைப்பில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது . இத்திரைப்படத்தின் முதல் பாகத்திலேயே ஏ ஆர் ரகுமானின் இசை வெகுவாக பாராட்டப்பட்டது .

- Advertisement -

கடந்த வருடம் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான மூன்று படங்களின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தன . சென்ற வருடத்தில் அவரது இசையில் வெளியான விந்து தணிந்தது காடு கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்டது . சமூக வலைதளங்களிலும் இந்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது . குறிப்பாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வெளியான மல்லி பூ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது . இந்தப் பாடல் ஆனது சமூக வலைதளங்களிலும் வைரலானது .

இதனைத் தொடர்ந்து விகடன் விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இதற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது . அந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் தனது மனைவி சாயிரா பானு உடன் கலந்து கொண்டார் .

- Advertisement -

விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் தொகுப்பாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரது மனைவியையும் மேடைக்கு அழைத்தனர் . அப்போது மேடை ஏறியர் ஏ ஆர் ரகுமானின் மனைவி ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்ததால் இடைமறித்த ஏ ஆர் ரகுமான் செல்லமாக தமிழில் பேசுமாறு அன்பு கட்டளை வைத்தார் இந்த சம்பவத்திற்கு அரங்கிலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . ஏ ஆர் ரகுமானின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி அரங்கையே அதிர வைத்தனர் .

- Advertisement -

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஆடிட்டரில் பதிவு ஒன்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை கஸ்தூரி . சர்ச்சைகளுக்கு பேர் போன இவர் ஏ ஆர் ரகுமான் மனைவிக்கு தமிழ் தெரியாதா என கேள்வி எழுப்பி ட் வீட் செய்துள்ளார் . இது குறித்து பதிவிட்டிருக்கும் அவர் ஏ ஆர் ரகுமான் மனைவிக்கு தமிழ் தெரியாதா? அவரது தாய் மொழி என்ன ? வீட்டில் என்ன மொழியில் பேசிக்கொள்வார்கள் என கேள்வி கேட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார் .

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இசை புயல் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் கஸ்தூரியின் பதிவை மறு பகிர்வு செய்து அதற்கு காதலுக்கு மரியாதை என தலைப்பிட்டு பதிவு செய்திருந்தார் . ஏ ஆர் ரகுமானின் இந்த பதிலடி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று இருக்கிறது . அவர்களும் இதனை மறுபக்கர்வு செய்து வருகின்றனர்

Most Popular