Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஏழை சிறுவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை தந்த ஏ.ஆர். ரஹ்மான்

ஏழை சிறுவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை தந்த ஏ.ஆர். ரஹ்மான்

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெளிச்சத்தை கொண்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், பொன்னியின் செல்வன்-2 இசை வெளியீடு. பிரம்மாண்ட மேடை; தமிழ்த் திரைப்படத்தின் உச்சபட்ட நட்சத்திர, தொழில் நுட்பக் கலைஞர் கூடுகை.

- Advertisement -

ரசிகர்கள் மயங்கிக் கேட்கிற அப்படத்தின் பாடல்களை நேரடியாகப் பாடுகிற பல்மொழி பின்னணிப் பாடகர்; பின்னணியில் அமர்க்களமான இசைக்கலைஞர் அணிவகுப்பு.இசைக்குழுவைக் கூர்ந்து நோக்கினால் வசீகரமான இளைஞர் பெரும்பாலானோர். முகத்தில் அந்த இசையின் அடிப்படை புரிந்த யதார்த்தம்; மிடுக்கான உடை என அவர்களைப் பார்க்க பெருமிதமாய் இருக்கிறது.

- Advertisement -

இருக்காதா பின்னே?இவர்கள் மட்டும் ARR என்கிற மனிதாபிமானமிக்க அந்த அற்புத இசைக்கலைஞனின் கண்களில் படாமல் போயிருந்தால்..?
இன்று சமூக அந்தஸ்தின் உச்சத்தில் இருக்கும் மேல்தட்டு மக்களின் பிள்ளைகளைப் போலவே இருக்கிற இவர்களில் பெரும்பாலானோர் கோடம்பாக்கம் MGR மாநகராட்சிப் பள்ளி முன்னாள் மாணவர்.

- Advertisement -

ஆம், 10-15 வருடங்களுக்கு முன் அன்றாட உணவுக்கும், தேவைகளுக்கும் போராடும் கீழ்மட்டக் குடும்பத்துப் பிள்ளைகள்.
ரஹ்மான் தன் வீட்டுக்கு அருகிலுள்ள அந்தப் பள்ளிப் பிள்ளைகளில் இசை நாட்டமுள்ள 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உலகின் தலைசிறந்த இசை ஆசிரியர்களை வைத்து இசை பயிற்றுவித்து, சர்வதேச தரத்துக்கு அவர்கள் தரத்தை உயர்த்தி இன்று அவர்களை இந்த சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்க்கிறார்.

இன்று இவர்கள் தங்கள் திறமையைக் கொண்டு பல இலட்சங்களை ஈட்டும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ரஹ்மானுடைய எல்லா பெரும் இசை நிகழ்ச்சிகளிலும் இவர்களைக் காணலாம்.இந்தியா மட்டுமன்றி வெளி நாடுகளிலும் இவர்கள் சென்று அவர்களுடைய மேற்கத்திய இசைக்கருவியை அவர்கள் வியக்கும் வண்ணம் வாசித்துப் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுகின்றனர்.தன்னை வளர்த்த சமூகத்துக்குக் கைம்மாறு செய்பவன்தான் பொறுப்புள்ள, போற்றத்தக்க மனிதன் என்று ரஹ்மானை அவர் பாராட்டியுள்ளார்.

Most Popular