Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாலண்டனில் முகாமிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான், மணிரத்னம்..!

லண்டனில் முகாமிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான், மணிரத்னம்..!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத கூட்டணி என்றால் அது மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் தான். இருவரும் இணைந்து பல்வேறு மெகா ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திற்காக இருவரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

படம் ரிலீஸ் ஆக இன்னும் 40 நாட்கள் தான் உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகளுக்காக ஏ ஆர் ரகுமான் தீவிரமாக இசை அமைத்து வருகிறார். இதற்காக மணிரத்தினமும் ஏ ஆர் ரகுமானும் லண்டனில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். இசை கோர்க்கும் பணி இன்னும் 10 நாட்களில் முடிவடையும். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் இதர பணிகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் டால்பி அட்மாஸ் சேர்க்கும் பணியின் போது பிரச்சனை ஏற்பட்டது. பல திரையரங்குகளில் டால்பி அட்மாஸ் சவுண்ட் சரியாக கேட்கவில்லை என குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து மீண்டும் இசை மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளுக்கும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இதனால் இம்முறை டால்பி அட்மாஸ் பணியையும் சிறப்பாக சேர்த்து முடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் படக்குழுவினர் உள்ளனர். நேற்று அகநக என்ற முதல் பாடல் ரிலீசான நிலையில் இன்னும் அடுத்த சில நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிட பட குழு முடிவு எடுத்துள்ளது.

இதன் பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. பத்து தலை மற்றும் சூபி இசை நிகழ்ச்சி என பிசியாக இருந்த ஏ ஆர் ரகுமான் தற்போது லண்டனில் சென்று பம்பரம் போல் பணியாற்றி வருகிறார். இதனால் ஏ ஆர் ரகுமான் ரசிகர் மகிழ்ச்சியில் உள்ளனர்

Most Popular