Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஇப்படி பண்ணிட்டாரா உதயநிதி ஸ்டாலின்..? மனம் திறந்து பேசிய சந்தானம் மற்றும் ஆர்யா..!

இப்படி பண்ணிட்டாரா உதயநிதி ஸ்டாலின்..? மனம் திறந்து பேசிய சந்தானம் மற்றும் ஆர்யா..!

பாஸ் என்கிற பாஸ்கரன் ,ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற திரைப்படங்களில் ஆர்யாவும், சந்தானமும் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

- Advertisement -

நகைச்சுவை கேலி கிண்டல் என்று இவர்களின் காம்போவில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மகிழும் வண்ணம் அமைந்திருந்தது. ஆனால் சில நாட்களாக இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படங்கள் நடிக்கவில்லை.

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானமும் தற்பொழுது கதாநாயகராக இனிமே இப்படித்தான் ,டிடி ரிட்டன்ஸ் ,ஏ1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்பொழுது நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது .தற்பொழுது இத்திரைப்படத்தினுடைய நிகழ்ச்சி ஒன்றில் சந்தானத்துடன் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

- Advertisement -

அப்பொழுது அவர்கள் பேசியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது .பாஸ் என்கிற பாஸ்கரனின் எப்படி இருவரும் இருந்தார்களோ அதே போன்று பேசினார்கள். சந்தானமும், ஆர்யாவும் எங்காவது ஒரு பைனான்சியரிடம் சென்றால் ஆர்யாவிடம் சந்தானத்தை பற்றியும் ,சந்தானத்திடம் ஆர்யாவை பற்றியும் விசாரிக்காத அவர்களை இல்லை என்று கூறினார் நடிகர் சந்தானம்

அவர்கள் விசாரிப்பது நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதற்காக அல்ல .அந்த அளவிற்கு இருவரும் பைனான்சியர்களிடம் கடன் வாங்கி இருக்கிறோம் .ஏதாவது திரைப்படங்கள் நடிக்கிறோமா வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவோமா என்ற எண்ணத்தில் தான் எங்களை விசாரிக்கிறார்கள் என்று வேடிக்கையாக கூறினார் நடிகர் சந்தானம்.

மேலும் நடிகர் சந்தானம் ஆர்யா கூறியதாக ஒரு செய்தியை கூறினார். தங்க முட்டை போடும் வாத்து ஒன்று கிடைத்திருக்கிறது என்று கூறினார். நாங்களும் அந்த வாத்து பின்னாடி கைய வச்சு பார்த்தா கடைசியில் எங்களுக்கு தான் பின்னாடி ரத்தம் வந்துச்சு என்று அவர் கூறியது உதயநிதி ஸ்டாலினை தான் என்று ரசிகர்கள் முடிவு செய்து விட்டார்கள் .

ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த சந்தானமும் உதயநிதி ஸ்டாலினும் ரசிகர்களுக்கு பிடித்த காம்போ தான்.

ஆனால் சந்தானம் இவ்வாறு கூறியது உதயநிதி ஸ்டாலினை தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் தான் தற்போது ஆர்யா நிற்கும் இந்த இடத்தில் நிற்க வேண்டியவர் என்றும் ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த நிலையில் மக்களை மகிழ்விக்கும் விதத்தில் சந்தானம் விரைவில் நானும் ஆரியாவும் பாஸ் என்கிற பாஸ்கரன் போல ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறோம். அந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்க  இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். அது பங்கமான கலாய்ப்படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் சந்தானம்

Most Popular