Tuesday, May 21, 2024
- Advertisement -
Homeசினிமாநான் ஒன்னும் அவங்க ஓனர் இல்ல.. பார்ட்னர்! மனைவி குறித்து பேசி ரசிகர்களின் மனதை அள்ளிய...

நான் ஒன்னும் அவங்க ஓனர் இல்ல.. பார்ட்னர்! மனைவி குறித்து பேசி ரசிகர்களின் மனதை அள்ளிய அசோக் செல்வன்

திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் எத்தனையோ பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக ஆகிறார்கள்

- Advertisement -

ஆனால் சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி ,சினேகா பிரசன்னா, போன்ற ஒரு சிலரை தான் ரசிகர்கள் பெருமளவில் ரசிக்கிறார்கள் அவர்களைப் போல் நாமும் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். இந்த வரிசையில் தற்பொழுது புதிதாக ஒரு ஜோடியும் சேர்ந்து இருக்கிறது அதுதான் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் தம்பதியாகும்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து கொண்டார்

- Advertisement -

இவர்களுடைய திருமணம் பெருமளவுகளால் வரவேற்கப்பட்டது. அதே சமயம் பலரால் விமர்சிக்கவும் பட்டது.விமர்சித்தவர்கள் எல்லாம் அசோக் செல்வனின் பெண் ரசிகைகள் தான். கீர்த்தி பாண்டியன் சற்று நிறம் குறைவாக இருப்பதை கூறி தங்களின் பொறாமையை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஆனால் அவருக்கு அசோக் செல்வன் உலகிலேயே மிக அழகான பெண்ணுடன் இருப்பதாக கூறி தன் மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.இது அவ்வாறு கீர்த்தி பாண்டியனை பற்றி பேசிய ரசிகைகளுக்கு நல்ல பதிலடியாக அமைந்தது.

அதிலிருந்து ஒரு சிறந்த கணவனாக எல்லாரும் பார்க்க துவங்கினார்கள் .அவர்கள் ஜோடி பலருக்கும் பிடித்திருந்தது. அதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக தற்பொழுது ஒரு செயலையும் சுற்றி வருகிறேன் செய்திருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு கீர்த்தி பாண்டியன் அன்பிற்கு இனியால், தும்பா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.அதற்குப் பிறகு தன் கணவர அசோக் செல்வர் உடனே இணைந்து தற்பொழுது ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .இத்திரைப்படம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதைப்பற்றி ஒரு பிரஸ் மீட்டில் அவரின் கணவர் ஆகிய அசோக் செல்வனிடம், இதற்கு நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது .அதற்கு அவர் கூறிய பதில் அவர் மீது அதிக மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கீர்த்தி பாண்டியனுக்கு இதுவெல்லாம் ஒரு பேஷன். இதில் நான் அனுமதிக்க நான் ஒன்றும் அவருடைய ஓனர் இல்லை .அவருடைய பார்ட்னர். என்னுடைய பேஷனை செய்ய வேண்டாம் என்றால் நான் சோகம் ஆகிவிடுவேன்.

அதே போல் தான் அவர்களுக்கும் இருக்கும். இதில் நான் தடுக்க நான் யார் என்று கூறி தன் மனைவியின் முடிவுகளுக்கு மதிப்பளிக்கும் கணவனாக ரசிகர்கள் முன் பிரதிபலித்தார் நடிகர் அசோக் செல்வன் .இதுபோன்று செயல்களால் ரசிகர்களுக்கு ஃபேவரட் கப்புள்ஸ் லிஸ்ட் அசோக்செல்வன் கீர்த்தி பாண்டியனும் இணைந்து விட்டார்கள்.

Most Popular