Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇதெல்லாம் பகல் கொள்ளை.. அடுத்த படத்தில் இரண்டு விதமாக சம்பளம் கேட்கும் அட்லி.. வேறு வழியின்றி...

இதெல்லாம் பகல் கொள்ளை.. அடுத்த படத்தில் இரண்டு விதமாக சம்பளம் கேட்கும் அட்லி.. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு சன் பிக்சர்ஸ்

இயக்குனர் அட்லி தமிழில் அடுத்தடுத்து நான்கு மெகா ஹிட் படங்களைக் கொடுத்த பின் கடந்த ஆண்டு ஹிந்தியில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார். பாலிவுட்டில் நடிகர் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் படைத்தது.

- Advertisement -

1200 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான் இந்திய படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமாக உயர்ந்துள்ளது. வசூலைத் தவிர விமர்சன ரீதியாகவும் வட இந்தியாவில் பெரிய வரவேற்பை பெற்றார் இயக்குனர் அட்லி. தமிழில் வந்த மசாலா படங்கள் வட இந்திய ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதால் கொண்டாடித் தள்ளினர்.

ஜவான் படத்தின் மூலம் அட்லி சினிமா துறையில் அடுத்தக்கட்ட சம்பள உயர்வுக்கு நகர்ந்துள்ளார். அடுத்ததாக அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வரவிருக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்திற்கு சம்பளத்தில் பெரிய கண்டிசன் ஒன்றைப் போட்டுள்ளார் அட்லி. வழக்கமாக கண்டிப்பான நிறுவனமாக செயல்படும் சன் பிக்சர்ஸ் இம்முறை சுமூகமாக ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, அட்லி குறைந்தபட்ச சம்பளத்தை வாங்கிக் கொண்டு படத்தை இயக்குவார். பின்னர் 500 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டால் அதில் ஒரு பங்கையும் அளிக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

- Advertisement -

அல்லு அர்ஜுன் – அட்லி படமென்பதால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் அட்லியின் கண்டிசனுக்கு ஒப்புக்கொண்டுள்ளது சன் நிறுவனம். அட்லியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பணத்தேவை எழுந்துள்ளதால் அவர் இது போன்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம். அட்லி மீண்டும் தமிழில் படத்தை தயாரிக்கவுள்ளார், அதில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதனை மனதில் வைத்து அவர் சம்பளத்தில் இப்படியொரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

Most Popular