Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஅயலான் மீண்டும் தள்ளிப் போவது உண்மையா வதந்தியா.. ? படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட்..‌‌ !

அயலான் மீண்டும் தள்ளிப் போவது உண்மையா வதந்தியா.. ? படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட்..‌‌ !

சிவகார்த்திகேயனின் அடுத்த படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று தான் அயலான். சுமார் இரண்டரை வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் இதர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் இன்னும் முடிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்.

- Advertisement -

முதலில் வர்த்தக ரீதியாக படக்குழு சில இன்னல்களை சந்தித்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு அந்தந்த நடிகர்கள் அவர்களின் அடுத்தப் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டனர். சிவகார்த்திகேயன் டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் என 4 படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியின் படத்தையே துவங்கிவிட்டார்.

இன்று நேற்று நாளை படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ரவிகுமார் அதே அறிவியல் வகையில் அயலான் படத்தையும் உருவாக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங், கருணாகரன், பானுப்ரியா, ஷரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

- Advertisement -

அண்மையில் சமூக வலைதளங்களில் அயலான் படத்தின் அப்டேட் என திடிக்கிடும் ஓர் செய்தியைப் பரப்பினர். அயலான் படத்தில் ஷூட்டிங்கை விட கிராபிக்ஸ் காட்சிகளில் தான் அதிக வேலைகள் இருக்கின்றன. அதனைச் சிறப்பாக அளிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது.

- Advertisement -

கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முழுமையாக முடியாததால் மீண்டும் ரீலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என தகலவல்களை சிலர் பரப்பிவிட்டனர். இதனை படக்குழு வதந்தி என மறுத்துள்ளது. திட்டமிட்டபடி தீபாவளிக்கு திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என உறுதியளித்துள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் விரைவில் டீசரையும் வெளியிட இருக்கிறார்கள்.

ஏலியன் வகையானப் படத்தை தத்ரூபமாக காட்ட படக்குழு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் வெளியாகும் படம் இந்திய சினிமாவில் இது தான் முதல் முறை. வதந்திகளை நம்பி ரசிகர்கள் யாரும் வருந்தத் தேவையில்லை. தீபாவளிக்கு ஜப்பான் – அயலான் மோதல் நிச்சயம் !

Most Popular