Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாபிரியங்கா மோகனுடன் குற்றாலம் சென்ற நடிகர் தனுஷ்.. முழு விவரம்

பிரியங்கா மோகனுடன் குற்றாலம் சென்ற நடிகர் தனுஷ்.. முழு விவரம்

- Advertisement -

நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை  2022 ஆம் ஆண்டு வெளிவந்த சாணி காகிதம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷோடு இணைந்து கதாநாயகியாக நடிகர் பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். அவர்களோடு சந்திப் கிஷாந்த், நிவேதிதா, சதீஷ் சிவராஜ் குமார், ஜான் கோகன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

இன்னும் இந்த திரைப்படம் 1930 ஆம் ஆண்டில் நடக்கக் கூடியது போன்ற கடைக்கதை களத்தில் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு திரைப்படம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை  ஒரு காணொளி இணை தலைப்பில் வெளிவந்தது. அதன் நடிகர்கள் தனுஷ் பார்ப்பதற்கு  காட்டுக்குள் பதுங்கி இருக்கும் போராளியை போன்று இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கொடைக்கானலில் இருந்து குற்றாலம் சென்றிருக்கிறார்கள். அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு வேலை இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகர் தனுஷ் உடன் இந்த திரைப்படத்தின் கதாநாயகி ஆன பிரியங்கா அருள் மோகம் குற்றாலம் சென்று இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மனைவியுடன் விவாகரத்து ஆன நடிகர் தனுஷ் இப்படி கதாநாயகியோடு ஊர் பயணம் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சின்ன ஒரு செயலையும் பூதக்கண்ணாடி வைத்து பெரிதாகப் பார்ப்பவர்கள் தான் இந்த மக்கள்.

இவர்கள் மத்தியில் இப்படி நடந்து கொள்வது நடிகர் தனுஷ் இருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தலாம். நடிகர் தனுஷ் தற்போதைய காலகட்டத்தில் விரைவாக வளர்ந்து வருகிறார். இந்திய சினிமாவில் டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். இப்படிப்பட்ட புகழ்களை காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் தனுஷ்.  சர்ச்சைகளில் எல்லாம் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று தனுஷ் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Most Popular