Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னையா சொல்றீங்க கொஞ்ச நேரத்துக்கே அப்படினா நம்ம கதி அவ்வ்வ்வ்...- சந்திரமுகி 2 இசையமைப்பாளரின் திகிலூட்டும்...

என்னையா சொல்றீங்க கொஞ்ச நேரத்துக்கே அப்படினா நம்ம கதி அவ்வ்வ்வ்…- சந்திரமுகி 2 இசையமைப்பாளரின் திகிலூட்டும் ட்விட்

வேட்டைய ராஜா என்றவுடன் நம் அனைவரின் நெஞ்சிலும் பராக் பராக் என்று ஓசை கேட்கும். அந்த அளவுக்கு சந்திரமுகி படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அனைவர் மனதிலும் இன்றளவும் நிறைந்து இருக்கிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா, பிரபு,ஜோதிகா வடிவேலு ஆகியோர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது சந்திரமுகி திரைப்படம். அப்படத்தில் ரஜினியும் வடிவேலுவும் சேர்ந்து செய்த அலப்பறைகள் என்று நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பவை.

திகில் ஊட்டும் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் காதல் காட்சிகள் பாடல் காட்சிகள்  போன்ற எந்த காட்சிகளுக்கும் குறைவில்லாமல். அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒட்டுமொத்தமாக திருப்தி படுத்திய படம் தான் சந்திரமுகி.

- Advertisement -

இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

- Advertisement -

அதன்பின் தமிழ் திரை உலகின் பிரபல நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கி பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.

ராகவா லாரன்ஸ்க்கும் பேய்க்குமான காம்போ கொல மாஸ் ஆக பல படங்களில் அமைந்துள்ளது.
மேலும் இதில்  கங்கணா ரெணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் பேய்க்கு பயப்படுவது போன்ற காட்சிகள் திரையில் வரும் போது நகைச்சுவையின் உச்சமாகவே இருக்கும். பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் குதூகலிப்பர்.இப்படத்தின் இசையை பாகுபலி,RRR போன்ற படங்களுக்கு இசையமைத்த எம் எம் கீரவாணி அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்கள்.

இவர் நம் இசை புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு அடுத்தபடியாக ஆஸ்காரை அலேக்காக தூக்கியவர்
RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலின் இசைக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதுக்கும் சொந்தக்காரர்.

இவர்தான்ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது சந்திரமுகி 2 படத்தின் இசை  சேர்ப்பு வேலையின் போது அந்த பட காட்சிகளை பார்க்கும் போது தமக்கே பயமாக இருந்ததாக கூறியுள்ளார்.மேலும் ரசிகர்களும் இதனைக் கண்டால் தூக்கமின்றி தவிப்பார்கள்.இத்தகைய படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இரண்டு மாதங்கள் தூக்கத்தை மறந்து படத்தின் இசையில் மெருகேற்றி உள்ளாராம்.

விநாயகர் சதுர்த்தி நாளான வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
பத்தாது குறையாக நகைச்சுவை மாமன்னன் மீம்ஸ் களின் பேரரசன்  வைகை புயல் வடிவேலுவை கான ஆவலுடன் ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் கண்டிப்பாக குட்டீஸ்களும் இப்பொழுதே தியேட்டருக்கு அழைத்துப் போகச் சொல்லி அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்..
எல்லாம் இருக்கட்டும் பெரிய பாம்பு எதற்கு உள்ளது என்ற உண்மையை இந்த சந்திரமுகி 2 விலா வது   ரசிகர்களுக்கு தெரிவிக்குமா படக்குழு?

Most Popular