சினிமா

சர்பட்டா 2 சென்ற ரஞ்சித்.. அப்போ கமல் படம் என்ன ஆச்சு?

கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நடிகர் ஆர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மயில் கல்லாக அமைந்த இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் ரஞ்சித் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisement

இதனால் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படம் என்ன ஆனது என்ற சந்தேகம் ரசிகன் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் கமல் தற்போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு படு பிஸியாக இருக்கிறார்.

இதற்கு காரணம் அவருடைய விக்ரம் திரைப்படம் பெற்ற வெற்றி தான். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார், அதன் பிறகு வெற்றிமாறனுடன் ஒரு படமும் லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் 2 திரைப்படமும் நடிக்க இருக்கிறார்.

Advertisement

இதை தவிர மாலிக் திரைப்படத்தின் இயக்குனருடன் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கமலுக்கு அடுக்கடுக்கான பிராஜகட்டுகள் இருப்பதால் பா ரஞ்சித்தின் மதுரை கதையை 2025 ஆம் ஆண்டு எடுக்க திட்டமிட்டுள்ளதா தெரிகிறது.

தற்போது தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் வைத்து பா ரஞ்சித் பிஸியாக எடுத்து வருகிறார். அதன் பிறகு கமலுக்காக ஓராண்டுக்கு மேல் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஏற்கனவே எழுதி வைத்திருந்த சார்பட்டா பரம்பர படத்தின் இரண்டாவது பாகத்தை ஆர்யாவை வைத்து எடுக்க இயக்குனர் ரஞ்சித் முடிவெடுத்துள்ளார்.

ஆர்யாவும் இந்த தருணத்தில் வேறு ஏதும் படங்களும் பணிபுரியாததால் அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். சார்பட்டா பரம்பரை படம் வருவதற்கு முன்பே இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தில் வைத்து வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டு இருந்ததாக கூறினார்

சார்பட்டா 2வில் மீண்டும் வேம்புலியுடன் சண்டை வருமா இல்லை வேறு ஏதாவது புதிய கதை களமாக இருக்குமா என்று இயக்குனர் ரஞ்சித் இதுவரை எங்கும் கூறவில்லை. எனினும் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top