Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாபோலீஸ் விசாரணைக்கு நான் எப்பொழுதும் தயாராக இருக்கிறேன் ..!இயக்குனர் அமீர் விளக்கம்..!

போலீஸ் விசாரணைக்கு நான் எப்பொழுதும் தயாராக இருக்கிறேன் ..!இயக்குனர் அமீர் விளக்கம்..!

சமீபத்தில் இயக்குனர் அமீர் இயக்கம் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜாபர் மீது கஞ்சா வழக்கு பதியப்பட்டது. இதனால் இவர் தயாரிக்கும் திரைப்படத்தின் இயக்குனரான அமீர் மீதும் ஊடகங்கள் குற்றச்சாட்டை சம்பந்தப்படுத்தியது.

- Advertisement -

இரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் அமீர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தெளிவான ஒரு உரையை எழுதி ஊடகங்களுக்கு சமர்ப்பித்தார். அதை பார்த்த பின்பும் அவர் மீது இருக்கும் சந்தேகக் கண் மாறாமல் அவரை குற்றம் சுமத்தி வருகிறார்கள். இதைக் கண்டித்து பணிவான முறையில் தற்பொழுது இயக்குனர் அமீர் ஒரு காணொளியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர் மரியாதைக்குரிய பத்திரிக்கை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு என் கனிவான வணக்கங்கள் என்று துவங்கியிருக்கிறார். என்னுடைய “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக விளக்கிய பிறகும் சில என் மீது பேரன்பு கொண்ட ஊடகங்களும் ,நண்பர்களும் தொடர்ச்சியாக குற்றச்செயலோடு என்னை ஈடுபடுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

அவர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் .அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இது போன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்த மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் நான். அப்படி இருக்கையில் இது போன்ற ஒரு குற்றச் செயலில் என்னை ஈடுபடுத்தி நீங்கள் பேசுவது என் மீது களங்கத்தை ஏற்படுத்துமே தவிர, என் குடும்பத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்து கொள்ள முடியாது.

- Advertisement -

நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். மேலும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வேறு சில துறை சார்ந்த அதிகாரிகளும் இதற்கு இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது என்னை விசாரணைக்கு அழைத்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

என்னுடைய இந்த சோதனையான காலத்தில் என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உரையை முடித்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

Most Popular