Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாதவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ..!இயக்குனர் அமீரின் பகிரங்கமான பதிவு..!

தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ..!இயக்குனர் அமீரின் பகிரங்கமான பதிவு..!

பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் தற்பொழுது” இறைவன் மிகப் பெரியவன்” என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் இந்த திரைப்படத்தை ஜாஃபர் சாதிக் என்ற தயாரிப்பாளர் தயாரித்து வந்தார்.

- Advertisement -

இவர் திமுக கட்சியின் மேற்கு மாவட்ட அயலகத்துறை துணை அமைப்பாளர் ஆவார் இவர் ஒழுக்கத்தில் ஏதோ குறை இருந்ததால் .இதன் காரணமாக இவரை திமுக நிரந்தரமாக கழகத்தை விட்டு நீக்கியது பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜாபர் சாதிக் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவர் பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் இல்லை 2000 கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சினிமாவில் இயக்குனர் அமீர் இயக்கும் “இறைவன் மிகப்பெரியவன் “,”மங்கை “,”மாயவளை”, “இந்திரா “என்ற நான்கு திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் .இதில் “இறைவன் மிகப்பெரியவன்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்பொழுது தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் மீது இப்படி ஒரு வழக்கு பதியப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

- Advertisement -

இப்படி தொடர்ந்து நான்கு திரைப்படங்களை அமீர் இயக்கி வருகிறாரே இதனால் அமீருக்கும் ஜாஃபர் சாதிக்கும் இந்த வழக்கிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ  என்று பலரும் சந்தேகித்து வந்த நிலையில் பகிரங்கமான ஒரு அறிவிப்பை இயக்குனர் அமீர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, வலைத்தள, வளைவழி, வானொலி ,பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம் என்று பணிவுடன் தன்னுடைய உரையை தொடங்கி இருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக எனது இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 22ஆம் தேதி நான் “இறைவன் மிகப்பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஏன் படப்பிடிப்பில் நிறுத்தப்பட்டது என்ன சுற்றி நடக்கிறது என்று ஊடகங்கள் வாயிலாக தான் நான் அறிந்து கொண்டேன் .உண்மை எதுவென்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை.

எதுவாயினும் செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளின் உண்மை இருக்குமேயானால். அது கண்டிக்கப்பட வேண்டியதும் ,தண்டிக்கப்பட வேண்டிய விடுமே என்று உறுதியாக கூறியிருந்தார் இயக்குனர் அமீர்.

நடிகர்களோடும் ,தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கறிவர்.

அந்த வகையில் சட்ட விரோத செயல்கள் எவை ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்பதை அறிவித்துக் கொள்கிறேன்

மேலும் முழு விவரம் தெரிந்த பிறகு பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரை சந்திக்க வருகிறேன் என்று கூறி “இறைவன் மிகப்பெரியவன் “என்று தன்னுடைய உரை முடித்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

இந்த செய்தி தற்பொழுது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது? இயக்குனர் அமீர் ஊடகத்துறைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வெளியிட்டு இருக்கும் இந்த பதிவு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

Most Popular