Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாசித்தார்த் அபிமன்யூ, மித்ரன் ஐ.பி.எஸ் மீண்டும் வருகின்றனர்.. ! தனிஒருவன் அப்டேட் கொடுத்த இயக்குனர் &...

சித்தார்த் அபிமன்யூ, மித்ரன் ஐ.பி.எஸ் மீண்டும் வருகின்றனர்.. ! தனிஒருவன் அப்டேட் கொடுத்த இயக்குனர் & ஹீரோ.. !

கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி ஹீரோவாக வர அவருக்கு எதிராக அரவிந்த் சுவாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தனி ஒருவன். இந்தப் படத்தில் ஹீரோ – வில்லன் காம்போ பட்டையக் கிளப்பியது. குறிப்பாக அரவிந்த சுவாமியின் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் தமிழில் சிறந்தவைகளில் ஒன்றாக அமைத்துள்ளது.

- Advertisement -

இப்படத்தில் ஜெயம் ரவியுடன், அரவிந்த் சுவாமி, நயன்தாரா, நாசர், தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் மிரட்டிவிட்டார். தீமை தான் வெல்லும் பாடல் எல்லாம் மெய் சிலிர்க்க வைத்தது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகப்போகிறது. இத்தனை வருடங்களாக ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை படக்குழு அது குறித்து எதுவும் வெளியிடவில்லை. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

- Advertisement -

இதனையொட்டி ரசிகர்களுக்கு நற்செய்தியை அளிக்கும் வகையில் அதிகாரபூர்வமாக இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை கொடுக்கவுள்ளனர். இதனை இயக்குனர் மோகன் ராஜா நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். அவர் கூறியதாவது, “ வருடாவருடம் அப்படத்திற்கு உங்கள் அன்பு கூடிக்கொண்டே போகிறது. இந்தப் படத்தை நான் இயக்கது பெரிய ஆசீர்வாதம். நானும் ஜெயம் ரவியும் விரைவில் இரண்டாம் பாகத்தை துவங்கவேள்ளோம். ”

- Advertisement -

மேலும், “ உங்களும் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வோம். அதற்காக கூடுதல் உழைப்பையும் நேரத்தையும் போடுகிறோம். உங்களின் இதே ஆதரவு தொடர வேண்டுமென விரும்புகிறோம். ” என்றனர் அண்ணன் – தம்பி. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மித்ரன் ஐ.பி.எஸ் மீண்டும் வருகிறார்.

Most Popular