Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்யும் சினிமாவில் பெரிய ஆள் தான்.. ரஜினி பேச்சு குறித்து மிஸ்கின் கருத்து

விஜய்யும் சினிமாவில் பெரிய ஆள் தான்.. ரஜினி பேச்சு குறித்து மிஸ்கின் கருத்து

ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தார்.

- Advertisement -

அப்பொழுது அவர் காகம் மற்றும் கழுகை வைத்து உதாரணம் கூறியிருந்தார். காகம் ஒரு இடத்தில் இருக்காது அங்கும் இங்கும் பறந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் கழுகு அமைதியாக இருக்கும். காகம் உயரப் பரந்து கழுகை கொற்றினாலும் கழுகு காக்கையை ஒன்றும் செய்யாது.

அதேபோல் காகம் கழுக அளவிற்கு உயர பருக்க ஆசைப்படும் ஆனால் காகத்தால் அது இயலாது. உயரப் பறக்க ஆசைப்பட்ட காகம் கடைசியில் கீழேதான் விழும் என்று விளக்கம் கொடுத்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ளாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் தளபதி விஜய் ரசிகர்களும் தவறாக புரிந்து கொண்டார்கள்.

- Advertisement -

ஏற்கனவே இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த குக்கும் பாடலில் மறைமுகமாக தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போவதையும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக போகிறார் என்பதையும் குறி வைத்து அதுவெல்லாம் நடக்காத காரியம் என்பது போல் இந்த பாடலை அமைத்திருக்கிறார்கள் என்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டது என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்ற கருத்தில் அந்த பாடல் இருந்தது. இதிலேயே தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார்கள். தற்பொழுது இசை வெளியீட்டு விழாவின் போது சூப்பர் ஸ்டார் பேசிய இந்த பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் தளபதி விஜய் பிடிக்கும் என்ற கருத்தும் இருந்து வருகிறது. அதை போல் தளபதி விஜய் முதன்முதலில் தன் தந்தையான ஏ சந்திரசேகரிடம் அண்ணாமலை திரைப்படத்தில் உள்ள இந்த நாள் என்ற சூப்பர் ஸ்டாரின் வசனத்தை பேசி தான் தற்பொழுது தளபதியாக இருக்கிறார் என்ற இதை பல மேடையில் தளபதி விஜய் சொல்லி இருக்கிறார்.

இவரும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இந்த நிலையில் இவர்களுடைய ரசிகர்கள் இந்த கருத்துக்களை பெரிதாக எடுத்து சண்டை போட்டு வருவதை நடிகரும் இயக்குனருமான மிஸ்கின் தவறு என்று கருத்து கூறியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் உள்ள அனைவருக்கும் ஒரு முன்னோடி ஆவார். விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. அவர் ஒரு பெரிய மனிதர் அவருடைய பேச்சை குழந்தைகளாய் இருக்கும் ரசிகர்கள் சர்ச்சையாக்குவது நல்லதல்ல.

அவர் அவ்வாறான கருத்தில் அதை நிச்சயம் கூறி இருக்க மாட்டார் என்று ரசிகர்களிடம் எடுத்துக் கூறி இருக்கிறார். மிஸ்கின் அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைவருக்கும் மூத்த மனிதராவார் அதனால் அவருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் மிஷ்கின்.

Most Popular